Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இதோ ஒரு நற்செய்தி: ரணிலின் அடுத்த நகர்வு – ஹக்கீம் ஆதரவு

.

 

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.

தமது கூட்டணியை வலுப்படுத்த தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்டாயமாகியுள்ளது.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் இம்முறை பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் பணியாற்றி வருவதால் அக்கட்சிகளுடன் ரணில் இன்னமும் கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லை.

ஆனால், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் அவர் ரகசிய பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை எதிர்க்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த பிரேரணையை எதிர்க்க முடியாது எனவும் அது தொடர்பில் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் எனவும் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.