Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவச விசா: அரசாங்கம் நடவடிக்கை

.

 

இலவச விசா வசதிகளுக்கு தகுதியான நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இம்மாத இறுதிக்குள் அதற்கான நடவடிக்கைகள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA)தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விரிவாக்கத்திற்கான அரசாங்கத்தின் அனுமதியைப் பெறுவதற்காக சுற்றுலா அமைச்சு வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“விசா கொள்கையை ஆராய்வதற்காக ஜனாதிபதி அண்மையில் அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை நியமித்திருந்தார்.

அவர்கள் இம்மாத நடுப்பகுதிக்குள் தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, இந்த மாத இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என நம்புகிறோம்” என்று பெர்னாண்டோ கூறினார்.

இலவச விசா வசதி உள்ள நாடுகளின் எண்ணிக்கையை 60க்கு மேல் அதிகரிப்பதை இந்த முன்மொழிவு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது நாடு பிராந்திய போட்டியாளர்களுடன் போட்டியிடுவதற்கும், வருடத்திற்குள் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்ற நாட்டின் லட்சிய இலக்கை அடைவதற்கும் அதிக நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கடந்த மாதம் கூறியிருந்தார்.

67 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்மொழிவு தொடர்பான விசேட குழு அறிக்கை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நாட்டிற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்தில் அரசாங்கத்தின் பல முயற்சிகளை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளிப்படுத்தியுள்ளார்.