Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

சஜித் தலைமையிலான அணி மீள பொற்காலத்தை உருவாக்குமா?; தொடரும் பரம்பரை அரசியல்

.

 

ஜனாதிபதித் தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் தற்போது கட்சிக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சியில் பொற்காலத்தை உருவாக்கிய டி.எஸ் சேனாநாயக்க, ஜே.ஆர் ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச மற்றும் காமினி திஸாநாயக்கவின் காலம் மீள உருவாக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது.

அதற்கான காரணம், குறித்த நான்கு தலைவர்களினதும் இரண்டாம் மூன்றாம் பரம்பரையை பிரநிதித்துவப்படுத்துபவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி தற்போது இணைந்திருப்பதே ஆகும்.

ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய தலைவரான டி.எஸ் சேனாநாயக்கவின் வம்சாவளியைச் சேர்ந்த வசந்த சேனாநாயக்க, சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் தற்போது இணைந்துள்ள நிலையில் ஜே. ஆர் ஜயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன கடந்த வாரத்தில் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவரும் 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய காமினி திஸாநாயக்கவின் மகனான மயந்த திஸாநாயக்க தற்போது சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார்.

அதன்படி, எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் பொற்காலத்தை உருவாக்கிய நால்வரது வம்சாவளியினரும் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியில் செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.