Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பங்களாதேஷ் – இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனஸ்: மாணவர்களின் தெரிவு

.

பங்களாதேஷில் அமைய உள்ள இடைக்கால அரசின் தலைவராக, நோபல் பரிசு வென்ற அந்நாட்டைச் சேர்ந்த முகமது யூனஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களின் புரட்சி காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து, வங்கதேசத்தின் ஜனாதிபதி முகமது சஹாபுதீன் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, வறுமையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், ‘ஏழைகளுக்கான வங்கியாளர்’ என்று அழைக்கப்படும் யூனஸ், இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Oruvan

இறுதியில், யூனஸ் தலைமையில் வங்கதேசத்தில் விரைவில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால அரசாங்கத்தில் 10-14 முக்கிய நபர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Oruvan

யார் இந்த முகமது யூனுஸ்?

இலட்சக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீள உதவியதற்காக, தற்போது 83 வயதான முகமது யூனஸிற்கு, கடந்த 2006 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

யூனுஸ் மீது 190க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஹசீனா அரசால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனா அரசாங்கத்துடன் கடந்த காலங்களில் அவர் பல்வேறு மோதல்களில் ஈடுபட்டுள்ளார்.

அவர் சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயதை 60க்கு மேல் ஆனவர் என்ற அடிப்படையில், கிராமீன் வங்கியின் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நாட்டின் தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக யூனுஸ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.