Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

அனுரவிடம் நாட்டை கையளிக்க மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்: 48 நாட்களில் அந்த சந்தர்ப்பம்

.

அதல பாதாளத்தில் இருந்து நாட்டைக் மீட்டெடுப்பதற்கான சரியான தொலைநோக்குப் பார்வையும், கொள்கையும் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டைக் கையளிக்க மக்கள் காத்திருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

“நாகரீகமான ஆட்சியை வழிநடத்தக்கூடிய ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க நாட்டு மக்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இன்னும் 48 நாட்களில் அந்த தலைவரை நியமிக்க வாய்ப்பு உருவாகும்.

அனுரவை அந்த இடத்தில் அமர்த்த மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.” எனவும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அனுரகுமார திஸாநாயக்க தமது கட்டுப்பணத்தை செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.