Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

மதிப்புக்குரிய மாவை சேனாதிராஜா அவர்களுக்கு ஓர் பகிரங்க வேண்டுகோள்

.

நீங்கள் தமிழரசு கட்சியின் சமத்துவமான தலைவராக செயல்படுவதை விடுத்து, சுமந்திரனின் ஊதுகுழலாகவும், பாரபட்சமாகச் செயல்படுவது போல் எமக்குத் தெளிவாகத் தென்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்சி மீது நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளை கட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றிப் பொதுவெளியில் முன்வைத்த திருமதி. சிறீ விமலேஸ்வரி அவர்கள் மீது நீங்கள் துணிச்சலாக நடவடிக்கை எடுத்திருந்தீர்கள்.

அதேபோல் நீங்கள் ஓர் நடுநிலைமையான, உறுதியான தலைவராக இருந்தால், முதலில் கட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி கட்சிமீது வழக்குத் தாக்கல் செய்து, பல தசாப்தப் பாரம்பரியம் கொண்ட தமிழரசு கட்சியின் செயற்பாடுகளை முடக்கி வைத்திருக்கும் திரு. பீற்றர் இளஞ்செழியன் மற்றும் திரு. சந்திரசேகரம் பரா ஆகிய இருவர் மீதும், இவர்களைப் பின்னாலிருந்து இயக்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும். இவர்களால் முடக்கப்பட்டு செயல்பாடற்றிருக்கும் கட்சியில் யாரிடம் அனுமதிபெற வேண்டும்?

செயற்பாடற்றிருக்கும் கட்சியின் அனுமதியின்றி, பொது வேட்பாளராகக் களம் இறங்கிய திரு. அரியநேந்திரன் தொடர்பாக, தமிழரசுக் கட்சி மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் இரத்துசெய்யப்பட்டு, தமிழரசுக் கட்சி வழமையான இயங்கு நிலைக்கு வந்த பின்னர், இனத்தையும், கட்சியையும் உண்மையாக நேசிக்கும் கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் பரிசீலனைசெய்யவும்.