Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

புதிய ஜனாதிபதியை வரவேற்க சீனா தயார்: இணைந்து பணியாற்றவும் விருப்பம்

.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் ஜனாதிபதியாக யார் தெரிவானாலும் அவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சீனா உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் ஆலோசகர் ஸு யாங்வே (Zhu Yanwei) கருத்து வெளியிடுகையில்,

“எந்த நாட்டின் இறையாண்மையிலும் ஒருமைப்பாட்டிலும் நாங்கள் தலையிட மாட்டோம். இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் யார் ஆட்சிக்கு வந்தாலும், புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது” என்று ஸு யாங்வே கூறினார்.

இதேவேளை, இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) ஒரே சீனக் கொள்கைக்கு இலங்கையின் நீண்டகால ஆதரவைப் பாராட்டினார்.

“ஒரே சீனா கொள்கையை இலங்கை கடைப்பிடிப்பது எப்போதும் பாராட்டுக்குரியது. இது உண்மையான நட்பின் உணர்வை பிரதிபலிக்கிறது.

நட்பு நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் சீனா உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அதேபோன்று சீனாவின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த சில முயற்சிகள் உள்ளன, ஆனால் அத்தகைய நோக்கங்களை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.” என்றும் கூறினார்.