மத்தியகுழுவில் நடந்த மோதல்: குருகுலராஜாவிற்கு அடிக்க எழுந்த சுமந்திரன்!
வவுனியா ‘தாயகம்’ காரியாலயத்தில் கூடியது வெறும் மத்தியக்குழுக் கூட்டம் மட்டுமல்ல; நீண்டநாளாகப் புகைந்துகொண்டிருந்த உட்கட்சிப் பூசல்களின் எரிமலை வெடிப்பு!
அரசியல் மேடைகளில் நாகரிகம் பேசும் முகமூடிகள், மூடிய அறைக்குள் எப்படி கழன்று விழுகின்றன என்பதை அம்பலப்படுத்திய அந்த விறுவிறுப்பான அரசியல் நாடகத்தை ஒரு கதையாகப் பார்ப்போம்:
அத்தியாயம் 1: திரைமறைவுச் சதித் திட்டம்
மத்தியக்குழுக் கூட்டம் என்றாலே ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் அழைப்புப் போக வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இன்றைய கூட்டத்திற்குப் பலருக்குக் கடிதமே அனுப்பப்படவில்லை. தங்களுக்குச் சாதகமான ஆட்களை மட்டும் திரட்டி, எப்படியாவது சிறீதரன் எம்பியை ஓரங்கட்டி, கட்சியைத் தங்கள் வசமாக்க வேண்டும் என்ற ‘திருட்டுத்தனமான’ திட்டத்தோடுதான் இன்றைய கூட்டம் கூடியது. வழக்கம்போலவே சுமந்திரன் தரப்பு, சிறீதரனுக்கு எதிராக இல்லாததும் பொல்லாததுமான குற்றச்சாட்டுகளை அடுக்கத் தொடங்கியது. கட்சியைத் தன் பிடிக்குள் வைத்திருக்க எதைச் செய்யவும் துணியும் அரசியல் சதுரங்கம் அது.
அத்தியாயம் 2: பொறுமை இழந்த ‘நல்ல மனுசன்’
இங்கேதான் கிளிநொச்சியின் ‘மண்வாசனை’ மிக்க மனிதரான குருகுலராசா சேர் அமர்ந்திருந்தார். வடக்கு மாகாணக் கல்வி அமைச்சராக இருந்தபோதும் சரி, சாதாரண மனிதனாக வாழ்ந்தபோதும் சரி... "புல்லுச் சிலும்பாமல்" அமைதியாக, இந்த மக்களுடனேயே பிறந்து, வளர்ந்து, சேவை செய்த ஒரு நல்ல வாத்தியார் அவர்.
எல்லாருக்கும் ஒரு எல்லை இருப்பதுபோல, இன்று குருகுலராசா சேரின் பொறுமை எல்லை தாண்டியது. சுமந்திரன் தரப்பு அடுக்கிக்கொண்டே போன பொய்களைக் கேட்டுத் தாங்க முடியாமல், தன் கம்பீரமான குரலில், "என்ன நீங்க இப்பிடி எல்லாம் பொய் சொல்லுறீங்கள்?" என்று நேருக்கு நேராகக் கேட்டுவிட்டார்.
அவர் கேட்டதில் எந்தத் தப்பும் இல்லை, அது சுட்டெரிக்கும் உண்மை! அத்தியாயம் 3: மூன்று அடி பாய்ச்சலும்... கையை ஓங்கிய சுமந்திரனும்!
'மென்போக்கு அரசியல்' செய்கிறேன் என்று உலகிற்குச் சொல்லும் சுமந்திரனுக்கு, அந்த உண்மை உறைத்தது. ஆத்திரத்தில் தன் இருக்கையை விட்டுச் சரியாக மூன்று அடி முன்னால் பாய்ந்து வந்தார். "அரசியல் பிழைப்புக்காக வந்து, கட்சியையும் அழித்து, தேசியத்தையும் சிதைப்பதா?" என்ற ஆத்திரம் தமிழ்த் தேசியவாதிகளுக்கு இருக்கும்தானே...
இங்கேயே பிறந்து, இங்கேயே வளர்ந்து மக்களுக்காக வாழும் ஒரு மூத்த தலைவருக்கு, கொழும்பிலிருந்து வந்த சுமந்திரன் அடிக்கப் பாய்ந்தது அங்கிருந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனே, நிலைமையைப் புரிந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட எம்.பி சிறீநாத் ஓடிவந்து, அடிக்கப் பாய்ந்த சுமந்திரனைப் பிடித்துத் தடுத்தார். கொழும்புக் கிளையைச் சேர்ந்த இரத்தினவேலோ, சுமந்திரனின் முதுகைத் தடவிக் கொடுத்து, சமாதானப்படுத்தி கொண்டு போய் சீட்டில் உட்கார வைத்தார்.
அத்தியாயம் 4: வாத்தியார் சிறீயின் ‘சண்டித்தனம்’!
சுமந்திரன் சீட்டில் இருந்து எழுந்த நேரத்தில், அங்கே இன்னுமொரு நெருப்புப் பொறி காத்துக்கொண்டிருந்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு வாத்தியார் சிறீ சும்மா இருப்பாரா? சிங்கம்போல சீறி எழுந்தார். "ஏலுமெண்டா அடியடா பாப்பம்! மடையா... எங்களை மடையனாக்கப் பாக்கிறியா? பேயா?!" என்று சண்டித்தனமாக வவுனியாத் தமிழிலேயே கத்தினார் சிறீதரன்.
அவ்வளவுதான்! அதுவரை சண்டியர் தனம் காட்டிக்கொண்டு, அடிக்கப் பாய்ந்த சுமந்திரன் தரப்பின் 'சண்டித்தனம்' பெட்டிப்பாம்பாய் மொத்தமாகப் படுத்துவிட்டது. அரங்கம் அப்படியே நிசப்தமானது.
மத்தியக்குழுக் கூட்டத்தில் சுமந்திரன் அப்படி அடிக்கப் பாய்ந்திருக்கக் கூடாது; அதேநேரம் சிறீதரனும் அந்த அளவுக்குக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருக்கக் கூடாது என்பதுதான் நடுநிலையான உண்மை. எது எப்படியோ, "இந்த சுமந்திரன் எண்ட அறுவானால கட்சி நாசமாப் போகுது" எண்டு சீ.வி.கே சிவஞானம் நினைக்காமலில்லை.
தந்தை செல்வா, சம்பந்தர், மாவை சேனாதிராஜா என எத்தனைப் பெரிய தலைவர்கள் இந்தக் கட்சியை எவ்வளவு ஜனநாயகமாக, கௌரவமாக வழிநடத்தினார்கள்? ஆனால், கொழும்பில் சொகுசாக இருந்துவிட்டு, பின் கதவால கட்சிக்குள் வந்த சுமந்திரன், இன்று குருகுலராசா சேர் போன்ற ஒரு நல்ல மனுசனை அடிக்கப் பாய்ந்தது, அவரின் அரசியல் இயலாமையையே காட்டுகிறது!


