Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

பரபரப்பாகும் ஜனாதிபதி தேர்தல் களம்: வெளிநாட்டு தலையிடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்

.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதன் முடிவுக்காக மூன்று வெளிநாடுகளின் சதித் தலையீடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று நாடுகளில் ஒரு நாடு மற்ற இரு நாடுகளை விட கடுமையாக உழைத்து வருவதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்காலத்தில் குறித்த நாடுகளில் ஒன்று இலங்கையில் ஆதிக்கத்தை ஏற்படுத்தி தனது புவிசார் அரசியல் சூழ்நிலையை பயன்படுத்த முயற்சிக்கிறது.

அத்துடன், சில மேற்குலக சக்திகள் சர்வதேச நாணய நிதியம் மூலம் இலங்கையை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சி செய்கின்றன செய்கிறன.

குறிப்பாக பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால சூழ்நிலை காரணமாக இந்த வெளிநாட்டு சக்திகள் தமது உத்திகளை முடுக்கிவிட்டிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், அந்த வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் குழுக்களுக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவின் தலையீடுகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

அதேபோல் இந்தியாவின் றோவின் தலையீடுகளும் அதிக இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான பின்னணியிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.