Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ஜனாதிபதி ரணிலின் ஆட்சி தொடர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி தொடர்ந்தால் தான் கடந்த இரண்டு வருட வளர்ச்சியை முன்கொண்டு செல்ல முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் சனிக்கிழமை (21) நடைபெற்ற நிலையில், யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தில் அமையப்பெற்றுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்ததன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சி தொடர வேண்டும். அப்போதுதான் கடந்த இரண்டு வருட வளர்ச்சியைத் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்ல முடியும்.

கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் நாடு மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டிருந்தது. அப்போது எவரும் நாட்டை பொறுப்பேற்க முன்வராத நிலையில் தற்துணிவுடன் பொறுப்பேற்று நாடு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பச் சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.

அதனால் அவரது வெற்றி இம்முறை நாட்டுக்கு அவசியமாகின்றது என்றும் சுட்டிக்காட்டிய அவர் நாட்டு மக்களும் அவரை வெற்றியடையச் செய்ய அணிதிரண்டு வாக்களித்து வருகின்றனர் என்றார்.