Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

போலி விசாவில் சிறுவனை லண்டனுக்கு கடத்த முயற்சி !

போலியான பயண ஆவணங்கள் மூலம் 17 வயது சிறுவன் ஒருவரை லண்டனுக்கு கடத்த முயற்சி.

போலி விசாவில் சிறுவனை லண்டனுக்கு கடத்த முயற்சி: முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

போலியான பயண ஆவணங்கள் மூலம் 17 வயது சிறுவன் ஒருவரை லண்டனுக்கு அனுப்பும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவைச் சேர்ந்த சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவர் சிறுவனுடன் லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளார். எனினும் அவர்களின் பயண ஆவணங்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக எல்லைக் கண்காணிப்புப் பிரிவுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.இதன்போது மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் பயண ஆவணங்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குறித்த சிறுவன் தன்னுடன் வந்த பெண் தமது தாய் இல்லை என்றும், தனது தாய் புறப்படும் முனையத்தில் காத்திருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.இதனையடுத்து இரு பெண்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும், குழந்தையின் முன்னேற்றத்திற்காகவும் சிறுவனை லண்டன் அனுப்ப முயற்சித்துள்ளதாக கூறியுள்ளனர்.மனிதக் கடத்தலுக்குப் பொறுப்பான இங்கிலாந்தில் வசிக்கும் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனின் விவரங்களின் அடிப்படையில் சிறுவன் மற்றும் பெண்ணின் பயண ஆவணங்களை போலியாக தயாரித்துள்ளார்.இந்தச் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.