Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்திக்கின்றார் கர்தினால்!

.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று சந்தித்து உரையாடவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கத்துவாப்பிட்டிய தேவாலயத்தில் இன்று கர்தினால் சந்தித்து உரையாடவுள்ளார் .

புதிய அரசாங்கத்தின் நீதிதொடர்பாக இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடவுள்ள கர்தினால் அரசாங்கத்தை சேர்ந்தவர்களுடன் சமீபத்தில் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்களிற்கு தெளிவுபடுத்தவுள்ளார்.

கர்தினால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்திக்கவுள்ளதை உறுதி செய்துள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டமைப்பின் தலைவர் நிசாந்த மொகாந்திரம் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுக்கள் குறித்து எங்களிற்கு நம்பிக்கையில்லை, என தெரிவித்துள்ள அவர் எங்களிற்கு இன்னுமொரு குழு தேவையில்லை,புதிய அரசாங்கத்திடமிருந்து வலுவான நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் விபரங்களை கர்தினால் இன்றைய சந்திப்பில் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்வார் என நிசாந்த மொகாந்திரம் தெரிவித்துள்ளார்.

இன்றைய சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கலந்துகொள்ளக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன.