Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

பெங்கொங் ஏரி அருகில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீனா; இராணுவத் தளமாகவும் பயன்படுத்தும் அபாயம்

.

இந்திய எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தற்போது பெங்கொங் ஏரியன் அருகில் சீன குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய – சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பெங்கொங் ஏரியின் குறுக்கே பாலம் ஒன்றையும் சீனா நிர்மாணித்தது.

அதன்படி, தற்போது அமெரிக்க மேக்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயற்கைக்கோளினால் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் பெங்கொங் ஏரியின் வடக்கில் புதிய கிராமம் ஒன்றையே சீனா உருவாக்கியுள்ளது.

எல்லையிலிருந்து சுமார் 36 கிலோமீட்டர்கள் தூரத்தில் அமைந்திருக்கும் இக் கிராமத்தில் 70 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இப் பகுதியைச் சுற்றிலும் இராணுவ கட்டமைப்பையும் சீனா வலுப்படுத்தி வருவதோடு, கிராமங்களை விரிவுபடுத்தி மக்களை அங்கு குடியேற்றவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேவையேற்படின் இதனை இராணுவ தளமாகவும் சீனா பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

17 ஹெக்டேர் அளவில் சுமார் 4,347 மீட்டர் தூரம் வீதி அமைக்கப்பட்டு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டில் பெங்கொங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன இராணுவத்தினர் ஊடுருவ முயன்றதும் குறிப்பிடத்தக்கது.