Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

எத்தனை இடர்வரினும் மக்கள் பணியினின்று ஓயோம்

.

கடந்த பதினைந்து ஆண்டுகால மக்கள் பணியில், என்றுமில்லாதவாறு சதிகள், சூழ்ச்சிகள், சேறுபூசல்கள், பொய்ப் பிரசாரங்கள் என்பவற்றின் ஊடாக மக்கள் மத்தியில் எமக்கிருக்கும் செல்வாக்கை மதிப்பிழக்கச் செய்யும் வகையிலான செயற்பாடுகளைப் பலரும் முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால், எமது மக்கள் தீர்க்கம் நிறைந்த அரசியல் பார்வையோடும், தெரிவுகள் குறித்த தெளிவோடும் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.

எத்தகைய இடர்களும் தடைகளும் வந்தாலும் இதுவரைகாலமும் தனிமனித அறம்வழுவாது ஆற்றிய பணிகளின் தடத்தில், இனியும் எனது அரசியற் களப்பணி தொடரும் என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பூநகரி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு, சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.