Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபடக்கூடாது ; அமெரிக்கா – பிரிட்டன்

.

இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடாது என அமெரிக்காவும் பிரிட்டனும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஈரான் மீண்டும் பதில்தாக்குதலை மேற்கொண்டால் நாங்கள் அதற்கு தயாராகவுள்ளோம் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஜோ பைடன் நிர்வாகத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இது இடம்பெறுவதை அமெரிக்கா விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிற்கும் ஈரானிற்கும் இடையிலான நேரடி மோதல் இத்துடன் முடிவடையவேண்டும், என தெரிவித்துள்ள அவர் லெபனானிலும் காசாவிலும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளிற்கு அமெரிக்கா தலைமை தாங்குகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடாது என பிரிட்டிஸ் பிரதமரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரானின் வன்முறைக்கு எதிராக பதில் நடவடிக்கை எடுப்பதற்கு இஸ்ரேலிற்கு உரிமையுள்ளது என தெரிவித்துள்ள அவர் பிராந்தியத்தில் மேலும் நிலைமை தீவிரமடைவதை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.