Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

நாடாளுமன்றத் தேர்தலை விரும்பும் சஜித் தரப்பு: காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க ரணில் முயற்சி?

செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்

நாடாளுமன்றத் தேர்தலை விரும்பும் சஜித் தரப்பு: காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க ரணில் முயற்சி?

இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று நேற்று வியாழக்கிழமை அறிவித்த பின்னரும் அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என விரும்புவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் டெயிலி மிரர் ஆங்கில செய்தி இணையத்தளம் தெரிவிக்கின்றது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினா்களே நாடாளுமன்றத் தேர்தலை விரும்புவதாகவும் அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு முடிவடைவதற்குள் நடத்தப்பட வேண்டும். அதன் பிரகாரமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை நடதத முற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் நேற்று கொழும்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தகவல்களின் பிரகாரம் 2025ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சில சமயங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைத்துக் காபந்து அரசாங்கம் (Caretaker Government) ஒன்றை அமைத்துவிட்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் யோசனை ஒன்றை ரணில் வைத்திருப்பதாகவும் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஜூலை மாத இறுதியில் இருந்து ஓகஸ்ட் மாத முற்பகுதிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் இலக்கம் 5 இன் விதிமுறைகளின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.