மடுக்கரை மண்ணில் இருந்து வைத்தியத்துறைக்கு முதன் முதலாக தெரிவான மாணவி...
,
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், முற்று முழுதாக நீரில் மூழ்கி ஒரு வாரத்திற்கு மேலாக மக்கள் நடமாட்டம் இன்றி பாதிக்கப்பட்ட பிரதேசம் மடுக்கரை பிரதேசமாகும். இந்தப் பிரதேசத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு மாணவி, செல்வி .ஜேக்கப் ஜெமிமா என்பவர் வைத்தியத்துறைக்கு தெரிவாகியுள்ளார் .இவர் மடுக்கரையில் தனது ஆரம்பக் கல்வியையும் தனது உயர்கல்வியினை நானாட்டான் டிலாசால் கல்லூரியிலும் கற்று ,2025 ஆம் ஆண்டின் உயர்தர பரீட்சையில் மருத்துவ பிரிவில் மாவட்ட ரீதியாக ஐந்தாம் இடத்தைப் பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளார் .
இந்த மாணவியின் உயர்வுக்கு காரணமாக இருந்த மடுக்கரை பாடசாலை சமூகம் மற்றும் டி லா சால் கல்லூரி சமூகம் இரண்டினையும் பாராட்டி வாழ்த்துகின்றோம். இந்த கிராமத்திலிருந்து மருத்துவ பிரிவுக்கு தெரி வாகியுள்ள மாணவியை வாழ்த்தி பாராட்டுவதில் அனோமீடியா பெருமை கொள்கிறது.
மேலும் இம் மாணவியை பாராட்டி 10.04.2026 அன்றைய தினம் நானாட்டான் பிரதேச செயலாளரினால் இம்மானவிக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.


