Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ரணிலுடன் இணைய முன் பசிலைச் சந்தித்த சம்பிக்க

.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் கடந்த செவ்வாய்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை சில தினங்களுக்கு முன்னர் இரண்டு தடவைகள் சந்தித்த பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் தலையீட்டில் சஜித் பிரேமதாசவுடன் சந்திப்புகள் இடம்பெற்றன.

சம்பிக்க ரணவக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய விருப்பம் தெரிவித்த போதிலும், சஜித் பிரேமதாச இது தொடர்பில் அக்கறை காட்டவில்லை.

இதையடுத்தே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க சம்பிக்க ரணவக்க தயாராகவுள்ளார்.

எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதால் ஏற்படும் முரண்பாடுகளை தீர்த்து வைக்கும் நோக்கில் பசில் ராஜபக்ஷவுடன் மேற்படி சந்திப்பு இடம்பெற்றதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பிக்க ரணவக்க, ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியாக இணையாது நிமல் லான்சா உள்ளிட்டோரால் கட்டியெழுப்பப்பட்ட புதிய கூட்டணியில் இணையவுள்ளதாகவும், அதன் ஊடாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.