Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

மஹிந்தவின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறது: அதிர்ச்சியில் தொண்டர்கள்.

.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி விரும்பவில்லை என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலக்குறைவு மற்றும் மருத்துவ பரிந்துரைகள் காரணமாக முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் உள்ள அசௌகரியத்தை கருத்தில் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலில் தமது கட்சியின் வெற்றிக்காக அவர் பாடுபட கட்சிக்கு உறுதியளித்துள்ளார்.

இலங்கை அரசியலில் கடந்த இரண்டு தசாப்தகாலமாக தீர்மானமிக்க நபராகவும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு பதவிகளை அலங்கரித்தவராகவும் உள்ள மஹிந்த ராஜபக்சவின முடிவு குறித்து தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பொதுஜன பெரமுன என்ற கட்சி உருவாக்கப்பட்டு குறுகிய காலத்துக்குள் மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர மஹிந்தவே காரணம். அவர் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வுபெற்றால் அது அக்கட்சிக்கு பாரிய இழப்பாக இருக்கும் என தொண்டர்கள் புலம்பி வருவதாகவும் தெரியவருகிறது.