Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மக்களின் தீர்ப்பு திருப்பு முனையாக அமையும் – எம்.ஏ.சுமந்திரன்

.

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு திருப்பு முனையாக அமையும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு சனிக்கிழமை (21) இரவு நடைபெற்ற நிலையில், குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமையப்பெற்றுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தலைமையைத் தீர்மானிக்கின்ற பொறுப்பு மக்களிடத்தில் இருக்கின்றது. ஆகவே மக்கள் சரியான தீர்ப்பினை அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்புள்ளது.

அத்துடன் இந்த ஜனாதிபதி தேர்தல் சரியானதொரு திருப்பு முனையாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி அல்லோலகல்லோப்பட்டிருந்த நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் மக்களின் அபிப்பிராயம் கோரப்படுகின்றது. ஆகவே மக்கள் தமது வலுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

தேர்தலில் ஏற்படுகின்ற மாற்றமானது, நாட்டிக்கும், மக்களுக்கும் சிறந்தவொரு வழியைக் காண்பிக்கும் என்று நான் நம்புகின்றேன் என்றார்.