Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

அனுரகுமாரதிசநாயக்க சுவீடனின் ஸ்டொக்கோமில்: தே.ம.சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில்,மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம். தெரிவித்துள்ளார்.

தே.ம.சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில்,மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம்.

தே.ம.சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில்,மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக இலங்கையின் அரசியலில் எதிர்எதிராக உள்ள சக்திகள் ஒன்றிணையக்கூடும் எனவும் அவர் சுவீடனின் ஸ்டொக்கோமில் தெரிவித்துள்ளார்.

சந்திரிகா ரணில்மகிந்த உட்பட அரசியலில் வேறுவேறு துருவங்களாக காணப்படும் சக்திகள் ஒன்றிணையக்கூடும் அவர்கள் ஒரே தளத்தில் காணப்படலாம் அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையிலான தனிப்பட்ட தகராறுகள் இதற்கு தடையாக காணப்படலாம் எனவும் சுவீடனில் தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க கொள்கைகள் அடிப்படையில் அவர்கள் மத்தியில் பிரச்சினைகள் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக அதன் வளர்ச்சியை தடுப்பதற்காக அவர்கள் ஒன்றுசேரலாம் எனவும் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 28 முதல் ஒக்டோபர் நான்காம் திகதிக்குள் நடைபெறலாம் என சுவீடனில் தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதலை மேற்கொண்டவர்களும் அதனை தடுக்கவேண்டியவர்களும் இணைந்து செயற்பட்டனரா என்ற கேள்வி காணப்படுகின்றது இது உண்மை என்றால் அது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு இட்டுசெல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தாஜ்சமுத்திரா ஹோட்டலில் குண்டை வெடிக்கவைக்க முயன்று தோல்வியடைந்த ஜமீல் தெகிவளைக்கு சென்றார் என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அவர் மீண்டும்குண்டை வெடிக்க வைக்க முன்னர் புலனாய்வு பிரிவினர் அவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர் இது எப்படி சாத்தியம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொடி ஜஹ்ரான் என்ற நபர் மாத்தளையில் கைதுசெய்யப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.