Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று

.

கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் ட்ரம்ப் முன்னிலை

அமெரிக்காவில் (USA) இன்று (05) ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது.

இந்தத் தோ்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஜனநாயகக் கட்சி சார்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனா்.

அந்த நாட்டின் நேரப்படி இன்று காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனடிப்படையில் அணி மாறும் மாகாணங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 7 மாகாணங்களின் மக்கள், ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் மாறி மாறி வாக்களிக்கின்றனர்.

இந்த மாகாணங்களில் அட்லாஸ் இன்டல் என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பை நடத்தியது. இதன்படி அரிசோனாவில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு 51.9% பேரும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலாவுக்கு 45.1% பேரும் ஆதரவு அளித்தனர்.

நெவாடாவில் ட்ரம்புக்கு 51.$% பேரும், கமலாவுக்கு 45.9% பேரும், நார்த் கரோலினாவில் ட்ரம்புக்கு 50.4% பேரும், கமலாவுக்கு 46.8% பேரும் ஆதரவு தெரிவித்தனர். இதர 4 மாகாணங்களிலும் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

அமெரிக்காவின் அயோவா மாகாணம் குடியரசு கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இந்த மாகாணத்தில் இருமுறை ட்ரம்ப் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் அயோவா மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா முன்னிலையில் இருக்கிறார்.

இதுதொடர்பாக டெஸ் மொய்னஸ் ரிஜிஸ்டர் என்ற நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலாவுக்கு 47% பேரும் ட்ரம்புக்கு 44% பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன் அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பெரும்பாலும் அன்றிரவே புதிய ஜனாதிபதி யார் என்பது உறுதி செய்யப்படும். இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்களுக்குப் பிறகே முடிவு தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.