Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

முள்ளிவாய்க்கால் 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ) ஆரம்பமானது.

இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய கம்பர்மலை வன்னிச்சி அம்மன் கோவிலில் பூசை .

முள்ளிவாய்க்கால் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பமானது.

இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய கம்பர்மலை வன்னிச்சி அம்மன் கோவிலில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், மேஜர் பண்டிதரின் தாயார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதி இளைஞர் அணி செயலாளர் உள்ளிட்டோர் பங்கு பற்றியிருந்தனர்.

அத்தோடு கம்பர்மலை சந்தியில் பாரதி இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கஞ்சி வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மே-18ஆம் திகதியை முன்னிட்டு முள்ளி வாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்ப நிகழ்வு இன்று (12) மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதி சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்‘ என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு சிவில் அமைப்பினால் இவ் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மே-18 என இலக்கம் பொறிக்கப்பட்ட பானையில் கஞ்சி காச்சப்பட்டு வீதியில் சென்றோர்களுக்கு பரிமாறப்பட்டது.

அத்துடன் முள்ளி வாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தலைப்பிலான துண்டு பிரசுரங்களும் மக்களின் பார்வைக்கு விநியோகிக்கப்பட்டது.

இன்று ஆரம்பிக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் கஞ்சி வாரமானது எதிர்வரும் மே-18ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.