Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

பப்புவா நியூகினியா மண்சரிவில் சிக்கி 300 பேர் உயிரிழப்பு; காணாமல் போனோரை தேடும் பணியில் மீட்பு குழுவினர்.

உலகெங்கிலும் பல நாடுகளில் கனத்த மழை பெய்து வருகின்ற நிலையில், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும், பொருட்சேதங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

பப்புவா நியூகினியா மண்சரிவில் சிக்கி 300 பேர் உயிரிழப்பு; காணாமல் போனோரை தேடும் பணியில் மீட்பு குழுவினர்.

உலகெங்கிலும் பல நாடுகளில் கனத்த மழை பெய்து வருகின்ற நிலையில், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும், பொருட்சேதங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

பப்புவா நியூகினியாவில் நேற்றைய தினம் பெய்த கன மழையினால், அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட இந்த மண்சரிவினால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதையுண்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மண்சரிவில் சிக்குண்டு சுமார் 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.