Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

மட்டு., காந்தி பூங்கா முன்பாக வாகனம் நிறுத்துவதற்கு மேலதிக தொகை அறவிடும் குத்தகைக்காரர்கள்

.

 

கடந்த 02 ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கார் நிறுத்தப்பட்டமைக்கு மாநகர சபையினால் மேலதிகமாக 50 ரூபாய் அறவிட்ட சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெண்ணொருவர் தனது காரை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நிறுத்தி விட்டு, காந்தி பூங்காவிற்குள் தனது பிள்ளைகளுடன் சென்றுள்ளார். சில மணிநேரம் கழித்து வீடு திரும்புவதற்காக காரின் அருகில் சென்ற வேளை அங்கு வந்த நபர் மாநகரசபையினால் காரிற்கு அறவிடப்படும் 50 ரூபாய் விட லொறி நிறுத்துவதற்கான கட்டணத்தை (100 ரூபாய்) அறவிட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பெண் நடந்த சம்பவத்தை கூறி காணொளியாக முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.