Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

மகிந்தவின் ஆதரவை வெளிப்படுத்துகிறதா ”ரணிலின் நற்செய்தி”?; பிரச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனவும் பேச்சு

.

 

இலங்கைத்தீவின் தலைநகர் கொழும்பில் பல இடங்களில் “நாட்டு மக்களுக்கு நற்செய்தி” எனக் குறிப்பிட்டு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களிலும் இது தொடர்பில் பலவாறு பகிரப்பட்டு வருகின்றன.

எனினும், எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவின் பிரச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த நற்செய்தி என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (26) நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது இந்த நற்செய்தியை தெரிவிக்கவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

“நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து காப்பாற்றினேன்” என்பதே அந்த நற்செய்தியின் தொனிப்பொருளாக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையின் தற்போதைய பொருளாதார அபிவிருத்தியில் எவ்வித மாற்றங்களும் இன்றி தொடர்வதும், சர்வதேச கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை சரியான முறையில் தொடர்வதும் அவசியமானது எனவும் எனவே அதற்கு “ஜனாதிபதி பதவியை தொடர்வது அவசியமானது“ எனவும் அறியப்படுத்தவுள்ளார்.

தலைநகர் கொழும்பு முழுவதும் “நாட்டு மக்களுக்கு நற்செய்தி” என்ற சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பச்சை மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிவப்பு ஆகிய நிறங்களை பயன்படுத்தி இந்த சுவரொட்டிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்பதை அறிவித்ததன் பின்னர் ரணில் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு பிரிவினரின் ஆதரவைப் பெறவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

குறித்த ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் எதிர்வரும் நாட்களில் அமைச்சர்களாக பலர் ரணில் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.