செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தன்னார்வலர் சுசீர் பாலாஜி மரணம்-எலான் மஸ்க் உள்ளிட்டோர் இரங்கல்
.

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான சுசீர் பாலாஜி மரணம் அடைந்துள்ளார். ஓப்பன்ஏஐ என்பது அமெரிக்க காப்பிரைட் சட்டத்தை மீறுவதாக இருக்கிறது என்று மூன்று மாதங்களுக்கு முன்பு வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.
ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான சுசீர் பாலாஜி மரணம் அடைந்துள்ளார். ஓப்பன்ஏஐ என்பது அமெரிக்க காப்பிரைட் சட்டத்தை மீறுவதாக இருக்கிறது என்று மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த 26 வயது இளைஞரான சுசீர் பாலாஜி, செயற்கை நுண்ணறிவு பெருநிறுவனமான ஓப்பன்ஏஐயில் பணியாற்றியவர். சான்பிரான்சிஸ்கோவின் புக்கானன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி இறந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ காவல்துறை அலுவலகம், தலைமை மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை சுசீர் பாலாஜியின் மரணத்தை உறுதிசெய்துள்ளதாக மெர்குரி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுசீர் பாலாஜியின் மரணம் குறித்து ஆய்வு செய்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது மரணத்துக்கு வேறு ஏதும் காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பாதகங்கள் அதிகம் என வெளிப்படையாக கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வந்ததால் சுசீர் பாலாஜி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தன்னார்வலராக அறியப்படுகிறார். இவரது கருத்தை நிரூபிக்கும் வகையில் காப்பிரைட் சட்டத்தை மீறியதாக ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.