Breaking News
சந்தேகத்திற்கு இடமின்றி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞரை பின்தொடரும் பொலிஸார்!
இளைஞரை கைது செய்வதற்காக அதிகாரிகளால் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட காரணம் நீதியானது அல்ல! புதிதாக பயங்கரவாத குற்றங்களை சுமத்துவதற்கு பொலிஸ் தரப்பு முயற்சி செய்திருக்கின்றது.

சந்தேகத்திற்கு இடமின்றி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞரை பின்தொடரும் பொலிஸார்
பலஸ்தீன மனிதப் படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி இஸ்ரேல் எதிர்ப்பைக் காட்டியமைக்காக அடிப்படைவாதக் குற்றம் சுமத்தப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞரை நீதிமன்றம் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுதலை செய்த பின்னரும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸார் தொடர்ச்சியான தேடுதல்களை முன்னெடுத்துள்ளனர்.
இருபது வயதுடைய மொஹமட் லியாவுதீன் மொஹமட் ருஷ்டி கைது செய்யப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் பதிலளிக்கும் போது பொலிஸ் உயர் அதிகாரிகளினால் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரை கைது செய்வதற்காக அதிகாரிகளால் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட காரணம் நீதியானது அல்ல என்ற சூழல் உருவாகி வந்த சூழ்நிலையில், புதிதாக பயங்கரவாத குற்றங்களை சுமத்துவதற்கு பொலிஸ் தரப்பு முயற்சி செய்திருக்கின்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அது நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்கு பொலிஸ் தரப்பினால் விடுக்கப்பட்ட சவால் விடுக்கும் ஒரு நடவடிக்கை என சட்ட நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீதிமன்றத்தை விட அதிகாரம் கொண்ட பயங்கரவாத தடுப்புப் பிரிவு
“பயங்கரவாத தடைச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டே நாம் இயங்குகிறோம். நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும் எதிர்காலத்தில் ஏதாவது நடைபெறலாம் என்ற சந்தேகத்தில் சந்தேகநபரை விசாரணைக்கு உட்படுத்த எமக்கு முடியும்” என ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளின் முன்னால் கருத்துத் தெரிவித்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (CTID) பொலிஸ் அத்தியட்சகர் லசந்த ரத்நாயக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூறியிருந்தார்.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் ருஷ்டி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் கொண்டு வரப்பட்டமைக்கு எதிராக அவரின் பெற்றோர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த போதும் பயங்கரவாத தடைப் பிரிவின் அதிகாரிகளின் வேலைப்பளுவைக் காரணம் காட்டி அது ஒரு மாதத்திற்கு பிற்போடப்பட்டது.
கடந்த 21ஆம் திகதி மீள அழைக்கப்பட்டிருந்த போது அந்த விசாரணைக்கு ஆணைக்குழுவின் சார்பாக ஆணையாளர் கலாநிதி கெஹான் குணதிலக தலைமையிலான விசாரணைக் குழுவின் முன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் லசந்த ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் ருஷ்டி குற்றவாளி அல்லது சந்தேகநபர் என்பதற்கு தம்மிடம் எந்த சாட்சியும் இல்லாத நிலையிலும், அவரால் எதிர்காலத்தில் ஏதேனும் ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்ற உத்தேசத்தில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.
“பயங்கரவாத தடைச் சட்டத்தின் 11 (1) உப பிரிவின் அடிப்படையில்தான் ருஷ்டி விடுதலை செய்யப்பட்டார். அது நிபந்தனைக்குட்பட்ட விடுதலை. அதாவது நீதிமன்றத்தால் சந்தேகநபரை தடுப்புக் காவலில் உள்ள மூன்று மாதங்களுக்கு இடையில் விடுதலை செய்த போதிலும் எமக்கு முழுக் காலமும் அவரை விசாரணைக்குட்படுத்த முடியும்.” என பயங்கரவாத தடைப் பிரிவின் அதிகாரிகள் விசாரணையின் போது கூறியதாக விசாரணையில் பங்குபற்றிய ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சாட்சி இன்றி பின்தொடர்தல்
ருஷ்டிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் முன்வைப்பதற்குப் போதுமான எந்த சாட்சியும் இல்லை என்று விசாரணைக்கு சமூகமளித்த பொலிஸ் அதிகாரிகள் விசாரணையின் போது தெரிவித்ததாக அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ருஸ்தி ஒரு அடிப்படைவாத கருத்துக்களை கொண்டவர் என்பதற்கு சாட்சிகள் இருப்பதால் மேலதிக விசாரணை நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவ்வாறான சாட்சிகள் இல்லை எனும் போது, ருஷ்டி விடயத்தில் ஏற்பட்ட தவறை சரி செய்வது எவ்வாறு என்பது தொடர்பில் ஆணைக்குழு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகளிடம் கேட்ட போது “அந்த சந்தர்ப்பத்தின் அடிப்படையில் தாம் இயங்கியதாகவும், அது தொடர்பில் மேற்கொள்ள வேறு மாற்று வழிகள் இருக்கவில்லை எனவும்” அந்த அதிகாரி தெரிவித்ததாக எம்மிடம் பேசிய குறித்த அதிகாரி தெரிவித்தார்.
‘இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டுங்கள்’ பயங்கரவாத தடை அதிகாரிகள்
பயங்கரவாதத் தடைப் பிரிவினால் மொஹமட் ருஷ்டி கைது செய்யப்பட பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவினல் 25.03.30 ஆம் திகதி விடுக்கப்பட்ட அறிக்கையில் “சுயமாக தூண்டப்பட்ட அடிப்படைவாத சிந்தனையைக் கொண்ட கடும்போக்குச் சிந்தனையைக் கொண்டவராக அடையாளம் காணப்பட்டிருப்பதாக” தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறே குறித்த அறிக்கையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படுவதற்கான காரணமாக ஸ்டிக்கர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் ருஷ்டி கைது செய்யப்பட பின்னர், அந்தக் கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஆளும் கட்சியின் பிரபலங்கள் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் அரசியல் பிரசாரக் கூட்டங்களிலும் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் அவர் ஸ்டிக்கர் ஒட்டியதை மையமாக வைத்தே
கைது செய்யப்பட்டிருந்தார். அவ்வாறே ருஷ்டி பணியாற்றிய சுப்பர் மார்கட்டிலிருந்த இருந்து அவரைக் கைது செய்வதற்கு அவர் செய்த குற்றமாக குறிப்பிடப்படுவது அவர் ஸ்டிக்கர் ஒட்டியதாக அடையாளம் வெளிப்படுத்தப்படாத ஒருவர் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாடாகும்.
எனினும் கடந்த 21 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடந்த விசாரணையின் போது பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் லசந்த ரத்னாயக்க ருஷ்டி ஸ்டிக்கர் ஒட்டியது தொடர்பில் பொலிசாருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஒன்றுக்கொன்று முரண்பட்ட அறிக்கைகள்
“ஸ்டிக்கர் ஒட்டியது பிரச்சினை அல்ல. பாதையில் அல்ல. இஸ்ரேல் தூதரகத்தின் முன் ஒட்டினாலும் எமக்குப் பிரச்சினை இல்லை. நாங்கள் இவரைக் கைது செய்தது தொலைபேசித் தொடர்பாடல் செயற்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்தே” என்று பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைக் குழுவின் முன் கூறியுள்ளார்.
எனினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் நடைபெற்ற விசாரணையில் வெளியான விபரங்களின் அடிப்படையில் ருஷ்டிக்கு எதிராக 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பெற்றுக் கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ருஷ்டி கைது செய்யப்படுவதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டிருப்பது “அடிப்படைவாதக் கருத்துகள் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டியமை“ என்றாகும். ருஷ்டி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டிய ஒருவராக சந்தேகித்து புதிதாக அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், நம்பகமான தகவல்கள் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
மொஹமட் ருஷ்டி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு 16 நாட்கள் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது உயிர்த்த தாக்குதல் தொடர்பில் அவரிடம் விசாரணை செய்யப்பட்டிருப்பது 12ஆவது தினத்தில் அதாவது நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு விடுதலை செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னராகும். அதுவும் சில தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவாகவே.
கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினது ருஷ்டியைக் கைது செய்து அதன் பின் தடுப்புக் காவலில் வைத்திருந்திருப்பது பரஸ்பரம் முரண்பட்ட சம்பவங்கள் சிலவற்றின் அடிப்படையிலாகும். முதலில் ஸ்டிக்கர் மற்றும் அடிப்படைவாதக் குற்றச்சாட்டு சுமத்திய போதிலும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் வரை அது தொடர்பில் ஏற்றுக் கொள்ளக் கூடிய எந்தவொரு சாட்சியும் அவருக்கு எதிராக முன்வைப்பதற்கு அதிகாரிகள் தவறி இருக்கிறார்கள். அதனால் எந்தவிதமான குற்றச்சாட்டும் இன்றி குறைந்த பட்சம் பிணை ஒன்றுக்கேனும் உட்படுத்தப்படாமல் ருஷ்டியை விடுதலை செய்ய வேண்டிய நிலை அத்தனகல்ல நீதிவானுக்கு ஏற்பட்டது.
ஒரே சட்டம் பயங்கரவாத சட்டமா?
நீதிமன்றத்தினால் குற்றச்சாட்டுக்கள் இன்றி விடுவிக்கப்பட்ட ருஷ்டியை தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் துரத்துவது எந்தளவு தூரம் நியாயமானது மற்றும் சட்டபூர்வமானது என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் அல்லது ருஷ்டி சார்பில் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரினார்களா? என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியவில்லை.
எவ்வாறாயினும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் ஏற்றுக் கொள்ளத்தக்க எந்த சாட்சியும் இன்றி ருஷ்டி கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தமையினால், அவருக்கு ஏற்பட்டுள்ள உளவியல் மற்றும் சமூக அழுத்தங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி கெஹான் குணதிலகவினால் வினவப்பட்டிருந்தபோதிலும் அதற்குப் பதிலாக பொலிஸ் அத்தியட்சகர் லசந்த ரத்னாயக தலைமையினால அதிகாரிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் செயற்படும் போது “செய்வதற்கு வேறு எதுவும் இல்லை” என்று பதில் வழங்கியிருந்தார்.
அவ்வாறே கைது செய்யப்படும் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படும் நபர் நிரபராதியா, அப்பாவியா என்பதை தேடித் பார்க்க தங்களால் முடியாது எனவும், அவ்வாறு செய்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போன்று தன் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது நீதிமன்றத்தின் மீது விடுக்கப்பட்ட சவால்
பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகளின் அறிக்கைகள் மூலம் தெளிவாவது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டாலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழே மேலும் விசாரணை செய்யலாம் என்பதாயின், அதன் மூலம் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது தாக்கம் ஏற்படல் மற்றும் குறித்த நபருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் பிரபலமான சட்டத்தரணிகளிடம் கேட்ட போது தெளிவாக அது நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சவாலாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
"இது மிக மோசமான அநீதியான நிலையாகும். சட்டம் ஒன்றில் என்ன இருந்தாலும், கடைசியாக தீர்ப்பை வழங்குவது நீதிமன்றம் என்றால் அதற்கு வெளியில் செயற்பட யாராலும் முடியாது. குறிப்பாக பொலிசாருக்கு முடியாது. இப்படி செய்வது எவ்வாறு? நீதிமன்றம் சாட்சி இல்லை என விடுதலை செய்கிறது. ஆனால், அதன் பின்னர் நீதிமன்றத்திற்கும் களவாக அந்த நபரின் குற்றங்களை தேட பொலிஸ் இரகசியமாக விசாரணைகளை நடத்துகிறது. அது சரியாக நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் இரகசிய சதி செய்வது போன்ற ஒரு செயலாகும். அதே போன்று ஒரே குற்றச்சாட்டுக்கு இரண்டு முறை வழக்கு விசாரணை நடத்த முடியாதே. நீதிமன்றத்தால் ஒருவர் விடுவிக்கப்பட்டால் அவர் விடுவிக்கப்பட்டவர்தான். அவ்வளவுதான்” என சட்டத்தரணி ஒருவர் குறிப்பிடுகிறார்.
பலஸ்தீன மனிதப் படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி இஸ்ரேல் எதிர்ப்பைக் காட்டியமைக்காக அடிப்படைவாதக் குற்றம் சுமத்தப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞரை நீதிமன்றம் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுதலை செய்த பின்னரும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸார் தொடர்ச்சியான தேடுதல்களை முன்னெடுத்துள்ளனர்.
இருபது வயதுடைய மொஹமட் லியாவுதீன் மொஹமட் ருஷ்டி கைது செய்யப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் பதிலளிக்கும் போது பொலிஸ் உயர் அதிகாரிகளினால் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரை கைது செய்வதற்காக அதிகாரிகளால் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட காரணம் நீதியானது அல்ல என்ற சூழல் உருவாகி வந்த சூழ்நிலையில், புதிதாக பயங்கரவாத குற்றங்களை சுமத்துவதற்கு பொலிஸ் தரப்பு முயற்சி செய்திருக்கின்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அது நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்கு பொலிஸ் தரப்பினால் விடுக்கப்பட்ட சவால் விடுக்கும் ஒரு நடவடிக்கை என சட்ட நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீதிமன்றத்தை விட அதிகாரம் கொண்ட பயங்கரவாத தடுப்புப் பிரிவு
“பயங்கரவாத தடைச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டே நாம் இயங்குகிறோம். நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும் எதிர்காலத்தில் ஏதாவது நடைபெறலாம் என்ற சந்தேகத்தில் சந்தேகநபரை விசாரணைக்கு உட்படுத்த எமக்கு முடியும்” என ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளின் முன்னால் கருத்துத் தெரிவித்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (CTID) பொலிஸ் அத்தியட்சகர் லசந்த ரத்நாயக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூறியிருந்தார்.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் ருஷ்டி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் கொண்டு வரப்பட்டமைக்கு எதிராக அவரின் பெற்றோர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த போதும் பயங்கரவாத தடைப் பிரிவின் அதிகாரிகளின் வேலைப்பளுவைக் காரணம் காட்டி அது ஒரு மாதத்திற்கு பிற்போடப்பட்டது.
கடந்த 21ஆம் திகதி மீள அழைக்கப்பட்டிருந்த போது அந்த விசாரணைக்கு ஆணைக்குழுவின் சார்பாக ஆணையாளர் கலாநிதி கெஹான் குணதிலக தலைமையிலான விசாரணைக் குழுவின் முன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் லசந்த ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் ருஷ்டி குற்றவாளி அல்லது சந்தேகநபர் என்பதற்கு தம்மிடம் எந்த சாட்சியும் இல்லாத நிலையிலும், அவரால் எதிர்காலத்தில் ஏதேனும் ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்ற உத்தேசத்தில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.
“பயங்கரவாத தடைச் சட்டத்தின் 11 (1) உப பிரிவின் அடிப்படையில்தான் ருஷ்டி விடுதலை செய்யப்பட்டார். அது நிபந்தனைக்குட்பட்ட விடுதலை. அதாவது நீதிமன்றத்தால் சந்தேகநபரை தடுப்புக் காவலில் உள்ள மூன்று மாதங்களுக்கு இடையில் விடுதலை செய்த போதிலும் எமக்கு முழுக் காலமும் அவரை விசாரணைக்குட்படுத்த முடியும்.” என பயங்கரவாத தடைப் பிரிவின் அதிகாரிகள் விசாரணையின் போது கூறியதாக விசாரணையில் பங்குபற்றிய ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சாட்சி இன்றி பின்தொடர்தல்
ருஷ்டிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் முன்வைப்பதற்குப் போதுமான எந்த சாட்சியும் இல்லை என்று விசாரணைக்கு சமூகமளித்த பொலிஸ் அதிகாரிகள் விசாரணையின் போது தெரிவித்ததாக அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ருஸ்தி ஒரு அடிப்படைவாத கருத்துக்களை கொண்டவர் என்பதற்கு சாட்சிகள் இருப்பதால் மேலதிக விசாரணை நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவ்வாறான சாட்சிகள் இல்லை எனும் போது, ருஷ்டி விடயத்தில் ஏற்பட்ட தவறை சரி செய்வது எவ்வாறு என்பது தொடர்பில் ஆணைக்குழு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகளிடம் கேட்ட போது “அந்த சந்தர்ப்பத்தின் அடிப்படையில் தாம் இயங்கியதாகவும், அது தொடர்பில் மேற்கொள்ள வேறு மாற்று வழிகள் இருக்கவில்லை எனவும்” அந்த அதிகாரி தெரிவித்ததாக எம்மிடம் பேசிய குறித்த அதிகாரி தெரிவித்தார்.
‘இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டுங்கள்’ பயங்கரவாத தடை அதிகாரிகள்
பயங்கரவாதத் தடைப் பிரிவினால் மொஹமட் ருஷ்டி கைது செய்யப்பட பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவினல் 25.03.30 ஆம் திகதி விடுக்கப்பட்ட அறிக்கையில் “சுயமாக தூண்டப்பட்ட அடிப்படைவாத சிந்தனையைக் கொண்ட கடும்போக்குச் சிந்தனையைக் கொண்டவராக அடையாளம் காணப்பட்டிருப்பதாக” தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறே குறித்த அறிக்கையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படுவதற்கான காரணமாக ஸ்டிக்கர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் ருஷ்டி கைது செய்யப்பட பின்னர், அந்தக் கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஆளும் கட்சியின் பிரபலங்கள் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் அரசியல் பிரசாரக் கூட்டங்களிலும் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் அவர் ஸ்டிக்கர் ஒட்டியதை மையமாக வைத்தே
கைது செய்யப்பட்டிருந்தார். அவ்வாறே ருஷ்டி பணியாற்றிய சுப்பர் மார்கட்டிலிருந்த இருந்து அவரைக் கைது செய்வதற்கு அவர் செய்த குற்றமாக குறிப்பிடப்படுவது அவர் ஸ்டிக்கர் ஒட்டியதாக அடையாளம் வெளிப்படுத்தப்படாத ஒருவர் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாடாகும்.
எனினும் கடந்த 21 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடந்த விசாரணையின் போது பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் லசந்த ரத்னாயக்க ருஷ்டி ஸ்டிக்கர் ஒட்டியது தொடர்பில் பொலிசாருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஒன்றுக்கொன்று முரண்பட்ட அறிக்கைகள்
“ஸ்டிக்கர் ஒட்டியது பிரச்சினை அல்ல. பாதையில் அல்ல. இஸ்ரேல் தூதரகத்தின் முன் ஒட்டினாலும் எமக்குப் பிரச்சினை இல்லை. நாங்கள் இவரைக் கைது செய்தது தொலைபேசித் தொடர்பாடல் செயற்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்தே” என்று பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைக் குழுவின் முன் கூறியுள்ளார்.
எனினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் நடைபெற்ற விசாரணையில் வெளியான விபரங்களின் அடிப்படையில் ருஷ்டிக்கு எதிராக 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பெற்றுக் கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ருஷ்டி கைது செய்யப்படுவதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டிருப்பது “அடிப்படைவாதக் கருத்துகள் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டியமை“ என்றாகும். ருஷ்டி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டிய ஒருவராக சந்தேகித்து புதிதாக அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், நம்பகமான தகவல்கள் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
மொஹமட் ருஷ்டி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு 16 நாட்கள் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது உயிர்த்த தாக்குதல் தொடர்பில் அவரிடம் விசாரணை செய்யப்பட்டிருப்பது 12ஆவது தினத்தில் அதாவது நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு விடுதலை செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னராகும். அதுவும் சில தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவாகவே.
கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினது ருஷ்டியைக் கைது செய்து அதன் பின் தடுப்புக் காவலில் வைத்திருந்திருப்பது பரஸ்பரம் முரண்பட்ட சம்பவங்கள் சிலவற்றின் அடிப்படையிலாகும். முதலில் ஸ்டிக்கர் மற்றும் அடிப்படைவாதக் குற்றச்சாட்டு சுமத்திய போதிலும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் வரை அது தொடர்பில் ஏற்றுக் கொள்ளக் கூடிய எந்தவொரு சாட்சியும் அவருக்கு எதிராக முன்வைப்பதற்கு அதிகாரிகள் தவறி இருக்கிறார்கள். அதனால் எந்தவிதமான குற்றச்சாட்டும் இன்றி குறைந்த பட்சம் பிணை ஒன்றுக்கேனும் உட்படுத்தப்படாமல் ருஷ்டியை விடுதலை செய்ய வேண்டிய நிலை அத்தனகல்ல நீதிவானுக்கு ஏற்பட்டது.
ஒரே சட்டம் பயங்கரவாத சட்டமா?
நீதிமன்றத்தினால் குற்றச்சாட்டுக்கள் இன்றி விடுவிக்கப்பட்ட ருஷ்டியை தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் துரத்துவது எந்தளவு தூரம் நியாயமானது மற்றும் சட்டபூர்வமானது என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் அல்லது ருஷ்டி சார்பில் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரினார்களா? என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியவில்லை.
எவ்வாறாயினும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் ஏற்றுக் கொள்ளத்தக்க எந்த சாட்சியும் இன்றி ருஷ்டி கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தமையினால், அவருக்கு ஏற்பட்டுள்ள உளவியல் மற்றும் சமூக அழுத்தங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி கெஹான் குணதிலகவினால் வினவப்பட்டிருந்தபோதிலும் அதற்குப் பதிலாக பொலிஸ் அத்தியட்சகர் லசந்த ரத்னாயக தலைமையினால அதிகாரிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் செயற்படும் போது “செய்வதற்கு வேறு எதுவும் இல்லை” என்று பதில் வழங்கியிருந்தார்.
அவ்வாறே கைது செய்யப்படும் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படும் நபர் நிரபராதியா, அப்பாவியா என்பதை தேடித் பார்க்க தங்களால் முடியாது எனவும், அவ்வாறு செய்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போன்று தன் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது நீதிமன்றத்தின் மீது விடுக்கப்பட்ட சவால்
பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகளின் அறிக்கைகள் மூலம் தெளிவாவது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டாலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழே மேலும் விசாரணை செய்யலாம் என்பதாயின், அதன் மூலம் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது தாக்கம் ஏற்படல் மற்றும் குறித்த நபருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் பிரபலமான சட்டத்தரணிகளிடம் கேட்ட போது தெளிவாக அது நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சவாலாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
"இது மிக மோசமான அநீதியான நிலையாகும். சட்டம் ஒன்றில் என்ன இருந்தாலும், கடைசியாக தீர்ப்பை வழங்குவது நீதிமன்றம் என்றால் அதற்கு வெளியில் செயற்பட யாராலும் முடியாது. குறிப்பாக பொலிசாருக்கு முடியாது. இப்படி செய்வது எவ்வாறு? நீதிமன்றம் சாட்சி இல்லை என விடுதலை செய்கிறது. ஆனால், அதன் பின்னர் நீதிமன்றத்திற்கும் களவாக அந்த நபரின் குற்றங்களை தேட பொலிஸ் இரகசியமாக விசாரணைகளை நடத்துகிறது. அது சரியாக நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் இரகசிய சதி செய்வது போன்ற ஒரு செயலாகும். அதே போன்று ஒரே குற்றச்சாட்டுக்கு இரண்டு முறை வழக்கு விசாரணை நடத்த முடியாதே. நீதிமன்றத்தால் ஒருவர் விடுவிக்கப்பட்டால் அவர் விடுவிக்கப்பட்டவர்தான். அவ்வளவுதான்” என சட்டத்தரணி ஒருவர் குறிப்பிடுகிறார்.