அமெரிக்கா புலித்தலைவர்களையும், மக்களையும் காப்பாற்றி விடுமோ என அஞ்சியே மே மாதத்திலே வலிந்து தாக்குதலை தொடுத்திருந்தோம்!-இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா.
மிரட்டும் இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா.

“ கொழும்பு போர் குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டினை எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்கு புதுடில்லியும் உடந்தையாக இருந்தது என என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிடுவேன் “
-இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா-
நாங்கள் பொதுமக்களின் இழப்பை குறைக்கும் விதமாக ஆவணி மாதமளவிலேயே கடைசிகட்ட வலிந்த தாக்குதலை திட்டமிட்டிருந்தோம், ஆனால் இந்தியாவின் சிவசங்கர் மேனன், நாராயணன் போன்றவர்களின் வற்புறுத்தலின் பேரில் கோத்தபாயவினால் தாக்குதல் வேகமாகவும், மோசமாகவும் முன்னெடுக்கப்பட்டது.
அமெரிக்கா புலித்தலைவர்களையும், மக்களையும் காப்பாற்றி விடுமோ என அஞ்சியே மே மாதத்திலே வலிந்து தாக்குதலை தொடுத்திருந்தோம். அதுவே பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தது என சரத்பொன்சேகா திருவாய் மலர்ந்திருந்தார்.
இதன் ஒட்டுமொத்த விளைவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாக முடிவடைந்திருக்கிறது. இந்தியா தனியே கோத்தபாய மீது இனப்படுகொலைக்கான குற்றச்சாட்டை முன்வைத்த போது,
“ கொழும்பு போர் குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டினை எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்கு புதுடில்லியும் உடந்தையாக இருந்தது என என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிடுவேன் “
என சரத்பொன்சேகா தெரிவித்தவுடன் புதுடில்லி வாயை மூடிக்கொண்ட சம்பவத்தை தமிழினம் என்றுமே மறந்துவிடாது.