Breaking News
செம்மணி மனித புதை குழி ஆய்வானது நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளது!
,

செம்மணி மனித புதை குழி ஆரம்பகட்ட ஆய்வானது நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளது.
இதுவரை 17- 18 மண்டையோட்டு தொகுதிகள் முழுமையாகவும் பகுதியளவிலும் அடையாளம் காணப்பட்ட நிலையில் 5 முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை தொல்பொருள் துறை பேராசிரியர் ராஜ் சோம தேவா நீதிமன்றத்தில் சமர்பித்த அபிப்பிராய அறிக்கையில் செய்மதி அறிக்கை மூலம் குறித்த பிரதேசத்தை தாண்டியும் குற்றபிரதேசம் என சந்தேகிக்கப்படும் பிரதேசம் இருக்கலாம் என்ற அடிப்படையில் சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கையின் அடிப்படையில் மேலும் 45 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கபடவேண்டும் என்ற கோரிக்கையை சட்டவைத்தியை அதிகாரி மன்றில் முன்வைத்தார் இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 45 நாட்களுக்கு மேலதிக ஆய்வை மேற்கொள்ளவதற்கான நிதி பாதீட்டினை உடனடியாக மன்றில் சமர்ப்பிக்குமாறு கட்டளை ஒன்றினை ஆக்கியுள்ளது .