நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக 28 விசாரணைக்குழுக்கள்!
சிறைச்சாலைத் திணைக்களத்தின் பல உயர் பதவிகள் மாற்றப்படும் !

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக 28 விசாரணைக்குழுக்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அனுப்பியுள்ளது.
பொது மன்னிப்புகளின் கீழ் கைதிகளை விடுவிப்பது மற்றும் விடுதலை செய்யப்படாத கைதிகளை விடுவிப்பது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆராய்வதற்காக இந்த குழு அனுப்பப்பட்டுள்ளது.
சிறைச்சாலைத் திணைக்களத்தின் பல உயர் பதவிகள் எதிர்வரும் நாட்களில் மாற்றப்படும் என்று சிறைச்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கண்காணிப்பாளர் பதவிகளிலும் வரும் நாட்களில் பல மாற்றங்கள் செய்யப்படும். சிறைச்சாலைத் திணைக்களத்தினை மறுசீரமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேற்படி திட்டத்தின்படி உயர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சிறைச்சாலை ஆணையர் நாயகம் இடைநீக்கம் செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்ட பின்னர், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பை துஷ்பிரயோகம் செய்து கடந்த காலங்களில் கைதிகளை விடுவித்த வழக்குகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள பல சிறப்பு குழுக்கள் அந்தந்த சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த காலங்களில் ஜனாதிபதி பொது மன்னிப்பை துஷ்பிரயோகம் செய்து கிட்டத்தட்ட நூறு கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல்கள் குறித்தும் திணைக்களம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க, தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதியின் மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதியொருவர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் பதவி விலகுவதாக தெரிவித்து இராஜிநாமாக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க புதிய ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.