அமெரிக்காவில் சர்வதேச நிபுணர்கள் மற்றும் இராஐதந்திர செயற்பாட்டாளர்களின் உரைகளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
“From Political Prisoner to UN Advocate” தமிழின விடுதலைப் போராட்டத்தை இளைய சமுதாயத்திற்கு எடுத்து செல்வதற்கு உதவும் நூல்!

மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. தம்பித்துரை குமார் தொடர்பாக அண்மையில் வெளிவந்த “From Political Prisoner to UN Advocate” புத்தகம், திரு. அனன் பொன்னம்பலம், திரு. விஜிதரன் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டது. இப் புத்தகம் தமிழின விடுதலைப் போராட்டத்தை இளைய சமுதாயத்திற்கு எடுத்து செல்வதற்கு உதவும் நூல் எனக் குறிப்பிடப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றம் அமெரிக்காவில் சர்வதேச நிபுணர்கள் மற்றும் இராஐதந்திர செயற்பாட்டாளர்களின் உரைகளுடன் ஆரம்பமாகி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
டிரம்ப்Trump) தலைமைத்துவம்: தமிழ் ஈழத்திற்கான வாய்ப்புகள்.” - என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேலவை மற்றும் பாராளுமன்றத்தின் கூட்டு அமர்வின் தலைப்பு.
ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச பிரபலங்கள் மே 16 முதல் 18, 2025 வரை நியூயார்க்கின் பஃபேலோவில்(Buffalo) நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நாடாளுமன்றத்தில் உரையாற்றினர்.
நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வு மாவீரரின் வீரத்தை சித்தரிக்கும் நடனத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சர்வதேச நிபுணர்கள் மற்றும் கல்விமான்களின் உரைகள் இடம்பெற்றன.
நாடாளுமன்ற அமர்வின் கருப்பொருள்கள்:
1) சர்வதேச சட்டத்தின்படி தமிழர்களின் நாடாளும் உரிமை.
2) சிறிலங்கா அரசு ஆட்சியில் இனவெறி: NPP இனவெறி மரபைத் தொடர்கிறது.
தொடக்க அமர்வின் முக்கிய பேச்சாளர்:
- ஹாங்காங்கின்(Hong Kong) சீன பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பேராசிரியர் அலெக்ஸ் கிரீன்(Professor Alex Green), சுயநிர்ணய உரிமை ஒரு உரிமை, வாக்கெடுப்பு அவ் உரிமைக்கு செயலுருவம் கொடுக்கும் ஒரு வழிமுறை, உள்நாட்டு பங்கேற்பு/ஆலோசனை அவசியம்; மேலும் கடுமையான ஒடுக்குமுறையே ஒரு சுதந்திர அரசுக்கு உரிமை அளிக்கிறது என்றும் கூறினார்.
- யமுனா சங்கரசிவம்( Yamuna Sangarasivam): சிராகஸ் (Syracuse) பல்கலைக்கழகத்தின் மானுடவியல் Anthropology) மற்றும் பெண்கள் மற்றும் பாலின ஆய்வுகள்(Gender Studies) பேராசிரியர்; தேசியவாதம், பயங்கரவாதம், தேசபக்தி: போரின் இனவியல் என்ற புத்தகத்தின் ( Nationalism, Terrorism, Patriotism: A Speculative Ethnography of War) ஆசிரியர்.
யமுனா சங்கரசிவம் தனது பேச்சில், ஈழத்தமிழர்கள், பழங்குடி மக்கள் உட்பட உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஒரு கூட்டணியை உருவாக்குவது பற்றி பேசினார்.
- யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர், இராணுவ மற்றும் அரசியல் ஆய்வாளர் டாக்டர் ஆர். பிரபாகரன் (அருஷ்) Dr. R. Prabaharan (Arush),) , வரலாற்றால் நாம் வழிநடத்தப்பட வேண்டும் என்ற சிறிலங்கா ஜனாதிபதியின் கருத்தை மேற்கோள் காட்டி, ஜேவிபி/என்பிபியின்(JVP/NPP) இன வரலாற்றைக் கருத்தில் கொண்டால், தற்போதைய சிறிலங்கா அரசு ஆட்சிக்கும் முந்தைய ஆட்சிகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்காது என்று கூறினார். மேலும் ஒரு சிறிய நாட்டின் அங்கீகாராமாவது சாத்தியமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
செனட்டர் உஷா ஸ்ரீஸ்கந்தராஜா Usha Sriskandarajah) மறைந்த பேராசிரியர் பிரான்சிஸ் பாயிலுக்கு( Prof. Francies Boyle)ஒரு நெகிழ்ச்சியான புகழாரம் சூட்டினார், அவரது மறைவு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு இழப்பு என்று குறிப்பிட்டார்.
முதல் நாள் மாலை பாராளுமன்றம் முறையாக சபாநாயகர் கார்த்திகேசு கலையழகனால் கூட்டப்பட்டது.
பேச்சாளர்களின் உரைகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் ஈடுபட்டு செயல் திட்டங்களை வகுத்தார்கள்.
2003-2005 தெற்கு சூடான் (South Sudan) உயர் நீதிமன்றத் தலைவர் கௌரவ குகூர்-லோபிடா பிடியாவின் (Hon. Kukur-Lopita Pitia) உரையுடன் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் தொடங்கியது; பொது வாக்கெடுப்புச் செயல்பாட்டின் போது சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதில் ஏற்படும் சர்ச்சைகள் விசாரிக்கும் நீதிமன்றங்களின் மேற்பார்வையாளராக இவர் தென்சூடான் பொதுவாக்கெடுப்பின்போது கடமையாற்றியவர்.
தற்போது தென்சூடானில் நடைபெறும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பொது வாக்கெடுப்புக்குப் பின்னர் எவ்வாறான ஆட்சிமுறை அமையும் என முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும் எனக் கூறினார். இதன்போது கலந்துரையாடலில், சுதந்திர தமிழீழத்தில் எவ்வாறான ஆட்சிமுறை அமையும் என்பது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் 2013 ஆம் ஆண்டு முரசறையப்பட்ட சுதந்திர சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இரண்டாம் நாள் அமர்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேலவையும், அரசவையும் இணைந்த கூட்டத்தொடர் நடைபெற்றது, “டிரம்ப்(Trump) தலைமைத்துவம்; தமிழீழத்திற்கான வாய்ப்புகள் குறித்து விவாதம் இடம்பெற்றது. கிறீன்லாண்ட்((Greenland) பனாமா கால்வாய்(Panama Canal), நிகழ்வுபூர்வமான சோமாலிலாண்ட்(de facto state of Somaliland) ஆகிய இடங்களில் வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கு குறித்துஇ டிரம்ப் ஆட்சியின் கவலையும்(சீனாவின் செலவாக்கு சிறிலங்காவிலும் வளர்ந்து வருவது), இனப்படுகொலைக்கு தமிழ்மக்கள் நீதிகோரும் பல்தரப்பு அமைப்புகளை(multilateral forums), டிரம்ப் ஆட்சி பலவீனப்படுத்துவதும் கவனத்தில் எடுக்கப்பட்டன.