Breaking News
முல்லை பாடசாலையில் நடந்த விபரீதம்:63 நபர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!
மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி சென்று தேனீக்கள் கொட்டிய நிலையில் 63 பேர் தற்போது வைத்தியசாலையில்

பாடசாலையொன்றில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி சென்று தேனீக்கள் கொட்டிய நிலையில் 63 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று காலை ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள குறித்த பாடசாலை வளாகத்திற்குள் இன்று(30) காலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களையும் தேனீக்கள் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தேனீக்கள் கூடுகட்டி இருந்துள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் குறித்த பாடசாலை மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
இந்நிலையில் திடீரென தேனீக்கள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி குத்தியுள்ளது.
இதனால் அச்சமடைந்த மாணவர்கள் பரவி பாய்ந்து ஒடியுள்ளனர்.
குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர், மாணவர்கள் உள்ளடங்கலாக 63 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆண் ஆசிரியர்கள்3, பெண் ஆசிரியர் ஒருவரும், பெண் மாணவர்கள் 24, ஆண் மாணவர்கள் 18 பேர் உள்ளடங்களாக மொத்தம் 46 பேர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு ஒட்டிசுட்டான் வைத்தியசாலையில் பெண் ஆசிரியர்கள் 03, ஆண் ஆசிரியர் ஒருவரும் ஆண் மாணவர்கள் 9 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.