“வடக்கு – கிழக்கில் அரச காணிமயமாக்கமும் அரசியல், சட்ட நோக்கு நிலைகளும்”
சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் கருத்துக்களை பகிர்ந்ததுடன், பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதில்களையும் வழங்கினார்.

'வடக்கு – கிழக்கில் அரச காணிமயமாக்கமும் அதன் அரசியல், சட்ட நோக்கு நிலைகளும்' எனும் தலைப்பில், காணி நிர்ணயச் சட்டத்தின் கீழ் 28.03.2025 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பான கருத்துப் பகிர்வு ஒன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் முதன்மைப் பேச்சாளராக சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் கருத்துக்களை பகிர்ந்ததுடன், பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதில்களையும் வழங்கினார்.
வடக்கு கிழக்கிலுள்ள தேசிய பிரச்சினையின் பின்னணி, காணியின் முக்கியத்துவம், அரசினால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிபு மற்றும் அதன் பின்னணி, காணிச் சட்டங்கள் என பல விடயங்கள் தொடர்பில் குருபரன் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டார்.
இந்த நிகழ்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள், பொது மக்கள் என பலர் பங்கேற்றனர்.
காணொளி... https://youtu.be/UrRl2Bw1WGg