ரஷ்ய – உக்ரைன் போரில் இராணுவ கூலிப்படையாக சிறிலங்கா இராணுவம்!
ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் ரஷ்யாவிற்கு பணிபுரிவதற்காகச் சென்ற இலங்கையர்களும் அந்நாட்டின் இராணுவத்துடன்.

ரஷ்ய – உக்ரைன் போரில் இராணுவ கூலிப்படையாக சிறிலங்கா இராணுவம்; தினம் தினம் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கும் பதிலிளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இதேவேளை, ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் ரஷ்யாவிற்கு பணிபுரிவதற்காகச் சென்ற இலங்கையர்களும் அந்நாட்டின் இராணுவத்துடன் இணைந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மற்றுமொரு இலங்கையர் பற்றிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.வலஸ்முல்லை உடதெனிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரஷ்யாவிலுள்ள தனியார் நிறுவனமொன்றிற்கு பணிய புரியச் சென்ற நிலையில் ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர் தனது வேலையிலிருந்து விலகி ரஷ்ய இராணுவ கூலிப்படையாக பணியில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்ய – உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காகஆட்கடத்தற்காரர்களால் அனுப்பட்ட சிறிலங்கா இராணுவ வீரர்கள் தொடர்பில் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின்றது.