தமிழர் இரத்தத்தால் சிவந்த செம்மணி!
நாவற்குழி முகாமின் பொறுப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன (பீல்டு மார்சல் சரத் பொன்சேகாவின் நெருங்கிய உதவியாளர்) கடமையில் இருந்தார்

செம்மணியில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொ*ன்று புதைக்கப்பட்ட போது யாழ்ப்பாணத்தின் இராணுவத் தளபதியாக பிரிகேடியர் ஸ்ரீ லால் வீரசூரியா இருந்தார்
அதே போல செம்மணி பகுதி அடங்கலான அந்த பிராந்தியத்தின் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா இருந்தார்
நாவற்குழி முகாமின் பொறுப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன (பீல்டு மார்சல் சரத் பொன்சேகாவின் நெருங்கிய உதவியாளர்) கடமையில் இருந்தார்
அதாவது செம்மணியை சூழவுள்ள பகுதிகளில் கடமையிலிருந்த Sri Lanka Sinha Regiment யின் 8th Battalion யுடைய 650 இராணுவத்தினர் மற்றும் 35 அதிகாரிகளின் கட்டளையிடும் நிருவாக அதிகாரியாக (Second in Command) மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன இருந்தார்
விசேடமாக செம்மணி இராணுவ தடை முகாம்களின் (Check Points) பொறுப்பதிகாரியாக 2 ஆம் லெப்டினன்ட் சஷிந்த துடுகல அதிகாரத்தில் இருந்தார்
அதாவது செம்மணி உள்ளடங்கலாக அப் பகுதியெங்கும் நடைபெற்ற மனித புதைகுழி உட்பட்ட கொடூர குற்றச்செயல்களோடு இவர்கள் நேரடியாக தொடர்புபட்டு இருந்தார்கள்
இவர்கள் தவிர , செல்வி கிரிசாந்தி படுகொ*லை குற்றாவளியான சோமரத்ன ராஜபக்ச செம்மணி புதைகுழி சூத்திரதாரிகள் என குறிப்பிட்ட இராணுவ அதிகாரிகளும் செம்மணி புதைகுழியுடன் தொடர்புபட்டவர்களாக அடையாளம் காணப்பட்டு இருந்தார்கள்
இவர்களில் 5 இளநிலை இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில் புதைகுழி வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டு அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கும் காலவோட்டத்தில் முடிவுக்கு கொண்டுவரப் பட்டது
2018 ஆம் ஆண்டு தரவுகளின் படி பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான கப்டன் சி. ஜே. டி. கே. லலித் ஹேவா பாணந்துறையில் உள்ள ஒரு இராணுவ விடுமுறை இல்லத்திற்குப் பொறுப்பான லெப்டினன்ட் கேணல் தர அதிகாரியாக கடமையிலுள்ளார்
கப்டன் சச்சிந்திர விஜேசிறிவர்தன லெப்டினன்ட் கேணல் தர அதிகாரியாக பனகொட இராணுவத் தலைமையகத்துடன் இணைக்கப்பட்டுள்ளள்ளார்
கப்டன் டி. டி. சசிக பெரேரா கலாவெவ இராணுவ முகாமில் லெப்டினட் கேணல் தர அதிகாரியாக கடமையில் இருக்கின்றார்
லெப்டினன்ட் ஏ. யடகாமா இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்
இது மாத்திரமின்றி லெப்டினன்ட் துடுகல, லெப்டினன்ட் உதயகுமார, மேஜர் கருணாசேகர, கப்டன் ஜயவர்தன, கோப்ரல் பண்டார, சார்ஜென்ட் சில்வா ஆகிய அதிகாரிகளையும் சோமரத்ன ராஜபக்ச அடையாளம் காட்டியிருந்தார்
அதே போல இராணுவ சிப்பாய் ஜே.எம். ஜயசிங்க, ஜயதிலக்க, நஸார், சமரவிக்ரம, பெரேரா (Probationary Private), நிஷாந்த (Probationary Private), முத்துபண்டா (Probationary Private) மற்றும் Alwis (Probationary Private-Dead) ஆகியோரும் 400-600 பேர் வரையான அப்பாவி பொதுமக்களை செம்மணியில் கொ*ன்று புதைத்தவர்ககளாக சோமரத்ன ராஜபக்ச சொல்லி இருந்தார்
அதே போல பிரியதர்ஷன, அப்துல் ஹமீட், சமரசிங்க ஆகிய பொலிஸ் அதிகாரிகளையும் சோமரத்ன ராஜபக்ச அடையாளப்படுத்திருந்தார்
அதாவது செம்மணி புதைக்குழி விவகாரம் தொடர்புடைய இராணுவ கட்டமைப்பு அடையாளம் காணப்பட்டு 26 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் மனித புதைகுழி தொடர்பான எவ்விதமான நீதியான விசாரணைகளும் நடத்தப்படவில்லை .
அதே போல பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பரிகாரங்களும் செய்யப்படவில்லை.
மாறாக சூத்திரதாரிகளை பல்வேறு தளங்களில் பாதுகாத்து பதவி உயர்வு உட்பட சலுகைகளை வழங்கி கெளரவித்து இருக்கின்றார்கள்
திருமதி சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் பிரிகேடியர் ஸ்ரீ லால் வீரசூரியாவை பாகிஸ்தான் தூதுவராக நியமித்திருந்தார்
அதே போல மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா அவர்களை அவுஸ்திரேலியா தூதுவராக நியமித்தார்
2005 ஆம் ஆண்டில் அதிகாரத்திற்கு வந்த ராஜபக்சே குடும்பம் மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா அவர்களை இந்தோனோசியா தூதுவராக நியமித்தது
இது போதாதென்று திரு ரணில் விக்ரமசிங்கே வடக்கு மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவராக மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவை நியமித்து இருந்தார்
அதே போல நல்லாட்சி (?) அரசாங்கம் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன அவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கி காலாட்படையின் பணிப்பாளராக நியமித்திருந்தது
இப்போது ஜேவிபி இராணுவ அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என வெளிப்படையாக அறிவித்து இருக்கின்றது
உண்மையில் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையில் சிறிய தேசிய இன மக்களுக்கு நீதி செய்ய வேண்டும் என்கின்ற எந்தவிதமான அரசியல் விருப்பும் இலங்கையின் எந்த ஆட்சியாளர்களுக்கும் கிடையாது என்பதே அவலமான உண்மையாகும்