Breaking News
பாசையூர் புனித அந்தோனியார் தேவாலய திருவிழா!
அந்தோனியாரின் திருச்சொரூப தேர்ப் பவனி வீதியுலா வந்ததை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருந்தனர்.

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (13.06.25) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியாரின் திருச்சொரூப தேர்ப் பவனி வீதியுலா வந்ததை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருந்தனர்.
பாசையூர் பெருநாளுக்கு போதை மாத்திரை விற்பனை இளைஞன் கைது!
பாசையூர் அந்தோனியார் பெருநாளில் போதை மாத்திரை விற்பனை செய்யும் நோக்குடன் வந்த இளைஞன் ஒருவர் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாசையூர் அந்தோனியார் தேவாலய திருச்சொரூப தேர்ப் பவனி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (13.06.25) மாலை இடம்பெற்றது. அதன் போது பெருமளவான பக்தர்கள் கூடியிருந்தனர்.
அந்நிலையில் , அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் , நடமாடிய இளைஞனை கண்ணுற்ற கடமையில் இருந்த காவற்துறையினர் இளைஞனின் செயற்பாட்டில் சந்தேகம் கொண்டு , இளைஞனை அழைத்து சென்று சோதனையிட்டனர்.
அதன் போது , இளைஞனனின் உடைமையில் இருந்து 10 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர். அதனை அடுத்து இளைஞனை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளில், திருவிழாவிற்கு வருவோருக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் அவற்றை எடுத்து வந்ததாக இளைஞன் கூறியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.