பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 14 வயதும் 6 மாதங்களும் கொண்ட சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்!
சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 6 ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிறி லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் சார்பில் இலக்கம் 3 வெல்கொல்ல வட்டாரம் பசறை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 14 வயதும் 6 மாதங்களும் கொண்ட சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் எனும் சந்தேகத்தின் பேரில் நேற்று (03/05) கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் 34 வயதுடைய சப்புகஸ்மட,நிகேபெத்த, பெல்காத்தன்ன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 திகதி குறித்த சிறுமி தனது வீட்டாருடன் முரண்பட்டு கொண்டு தனது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதுடன் அன்று இரவு வீடு திரும்பவில்லை என நவம்பர் மாதம் 27 ம் திகதி குறித்த சிறுமியின் பெற்றோரினால் பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு அளித்து விட்டு வீடு சென்ற பெற்றோர் அங்கு தனது மகள் வீட்டுக்கு வந்திப்பதை அவதானித்து உள்ளனர் . பின்னர் 28 ம் திகதி மீண்டும் பசறை பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளித்த பெற்றோர் , தனது மகள் கவனமாக வீடு திரும்பியுள்ளதா கூறி முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக சிறுமியின் நடத்தையில் சந்தேக ஏற்பட்டதாகவும், அதனால் இம்மாதம் சிறுமியை பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிதனதாகவும் சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது சிறுமியிடம் விசாரணைகளை மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவு பொலிஸார் , குறித்த நபரினாலேயே தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த சிறுமி கூறியதைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை பசறை நீதிவான் முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.