Breaking News
வெளியானது 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு... உடனடியாக அமலுக்கு வந்த நடத்தை விதிகள் என்னென்ன?
தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகும் என்பது நடத்தை விதிகளில் முக்கியானதாகும்
நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி மத்திய மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக பணத்தை ரொக்கமாக எடுத்துச்செல்லமுடியாது. அப்படி எடுத்துச்செல்லப்படும்போது முறையான ஆவணங்களை உடன் எடுத்துச்செல்லவேண்டியது கட்டாயமாகிறது.
மாநில அரசாங்கள் மற்றும் கலால் வரித்துறை சார்பில் அனுமதிக்கப்பட்ட மதுக்கடைகள் மட்டுமே இயங்க முடியும். இவை தவிர்த்து மாநில தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அனைத்து மாவட்டங்களும் வந்துவிடும். தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுவர்,.