ஜூலி சங் - உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பதிவில்
உண்மையை துணிச்சலுடன் பின்பற்றும் இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர்களிற்கு நாங்கள் என்றும் ஆதரவாக இருக்கின்றோம்.

அதிகாரம் மக்களின் கரங்களிலேயே நீடித்திருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள்.
உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
உண்மையை துணிச்சலுடன் பின்பற்றும் உலகெங்கிலும் உள்ள மற்றும் இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர்களிற்கு நாங்கள் என்றும் ஆதரவாக இருக்கின்றோம்.
ஆரோக்கியமான ஜனநாயகத்தை பேணுவதிலும் பொதுமக்களிற்கு விடயங்களை தெரியப்படுத்துவதிலும் பத்திரிகையாளர்கள் இன்றியமையாத பங்கை வகிக்கின்றனர்.
அவர்கள் பொது நிறுவனங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வணிகங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழலை வெளிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைதன்மைக்காக குரல் கொடுப்பதன் மூலம் விமர்சனத்துடனான ஆய்வுகளை முன்வைப்பதன் மூலம் பத்திரிகையாளர்கள் அதிகாரம் மக்கள் நீடித்திருப்பதை உறுதி செய்கின்றனர்.
உண்மையைத் துணிச்சலுடன் கூறிய தமிழ் பத்திரிகையாளர்கள் நடுவீதியில் வைத்து நாய் போல் சிறிலங்காராணுவத்தால் சுடப்பட்டபோது அவர்களுக்கும், அவர்கள் சார்ந்தவர்களுக்கும் எவருமே ஆதரவாகஇருக்கவில்லை இந்த உலகம் அதைக் கண்டு கொள்ளவும் இல்லை.