Breaking News
கொழும்பில் சீன உளவு கப்பல்.. எதிர்ப்பை மீறி இந்தியாவுக்கு ரணில் விக்கிரமசிங்கே பச்சை துரோகம்!
கொழும்பு: இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி சீனாவின் ஆராய்ச்சி என்ற பெயரிலான உளவு கப்பல் இலங்கை தலைநகர் கொழும்பை வந்தடைந்துள்ளது.
கடல்சார் ஆராய்ச்சி என்ற பெயரில் இந்தியாவை அதிநவீன உளவு கருவிகள் மூலம் இலங்கையில் இருந்து உளவு பார்ப்பது, கண்காணிப்பது என்பது சீனாவின் தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது. இதற்கு இலங்கை அரசும் உடந்தையாக இருக்கிறது.
இலங்கை பொருளாதார பேரழிவில் சிக்கி நடுத்தெருவில் நின்று அதிபர், பிரதமர் பதவி விலக வேண்டிய புரட்சி ஏற்பட்டது. அப்போது இந்தியாதான் நல்லெண்ண அடிப்படையில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி கொடுத்தது. ஆனால் சீனாவோ அப்போதும் குறுகிய கால கடன்களை கொடுத்து இலங்கையின் நிலப்பரப்பை அபகரிப்பதில் முனைப்பாக இருந்தது. இன்றளவும் இலங்கைக்கு இந்தியாதான் பேருதவி செய்து வருகிறது.