2026 முதல் செயல்படுத்தப்படும் புதிய கல்வித்திட்ட மாற்றச் செயல்முறை!
2026 ஆம் ஆண்டு முதல் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

2026 முதல் செயல்படுத்தப்படும் புதிய கல்வித்திட்ட மாற்றச் செயல்முறை தொடர்பான வழிகாட்டுதல்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் இல் வெளியிடப்படும் .
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வித்திட்டமாற்றச் செயற்பாடுகள் தொடர்பான வழிகாட்டல்களை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் அதற்கான ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தொடர்பான கலந்துரையாடல் ஜூன் 16 ஆம் திகதி மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டு முதல் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், 2028 ஆம் ஆண்டு தரம்10 ற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், புதிய பாடத்திட்டத்தின்படி சாதாரண தரப் பரீட்சை 2029 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும், தரம் 9 முதல் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இதன்போது, தேசிய கல்வி நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவுகளின் தலைவர்களும், இக் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான செயல்முறையை தங்கள் பிரிவுகள் மூலம் செயல்படுத்துவது மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இது பாடத்திட்டத்தை திருத்துதல், ஆசிரியர் பயிற்சி, நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், முறையான பரிந்துரை செயல்முறை மற்றும் இதற்காக பொதுமக்கள் பங்கேற்பு ஆகிய 5 தூண்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி மாற்றம் என்றும், மனப்பான்மை நிறைந்த ஆசிரியர்களை உருவாக்குவது தேசிய கல்வி நிறுவனங்களின் பொறுப்பு என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த சீர்திருத்தங்களைத் தொடரவும், அவை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை ஆராயவும், முறையான மதிப்பீட்டு செயல்முறையை உருவாக்கவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில், கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ, மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுள விதானபத்திரன மற்றும் நிறுவனத்தின் அனைத்துத் துறைகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.