பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ், ஆளுநர் செயலகத்தில் நேற்று (18) வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
,

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ், ஆளுநர் செயலகத்தில் நேற்று (18) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போதே செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு, காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் என்பன தொடர்பான களநிலைமைகளை வடக்கு மாகாண ஆளுநரிடம் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் துருவித் துருவி கேட்டறிந்து கொண்டார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பிலும், விமான சேவை மற்றும் கப்பல் சேவைகள் தொடர்பாகவும் ஆளுநரிடம் பிரிட்டன் தூதுவர் கேட்டறிந்துகொண்டார்.
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கட்டுநாயக்காவுக்கும் பலாலிக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிப்பது பெருமளவு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவக் கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இதற்குரிய கோரிக்கை அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்