விண்வெளியில் வாசம் எப்படி இருக்கும் தெரியுமா? -விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!
விஞ்ஞானிகள் விண்வெளியின் வாசனைகள் மற்றும் துர்நாற்றங்கள் குறித்து பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.

விஞ்ஞானிகள் விண்வெளியின் வாசனைகள் மற்றும் துர்நாற்றங்கள் குறித்து பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.
பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி அறிய, பூமியின் அருகிலுள்ள அண்டை கிரகங்களிருந்து நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகங்கள் வரை, ஆய்வு செய்கின்றனர்.
அந்தவகையில் வியாழன், 'கடுமையான துர்நாற்றம் வீசும் கிரகம்' என்று மெரினா பார்செனிலா கூறுகிறார்.
சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோளான வியாழன், பல அடுக்குகளில் மேகங்களைக் கொண்டுள்ளது என்றும், ஒவ்வொரு அடுக்குக்கும் வெவ்வேறு வேதியியல் கலவை உள்ளது என்றும் அவர் விளக்குகிறார்.
வாயுக்கள் நிறைந்த இந்த ராட்சத கிரகம் அதன் 'விஷம் நிறைந்த மார்சிபன் மேகங்களின்'அற்புதமான நறுமணத்தால் ஒருவரை மயக்கக்கூடும் என்றும், ஆனால் உள்ளே ஊடுருவிச் செல்ல செல்ல, அந்த வாசனை மோசமாகிவிடும் என்றும் கூறுகிறார்.
அவர் அந்த துர்நாற்றத்தை பூனையின் சிறுநீரின் துர்நாற்றத்துடன் ஒப்பிடுகிறார்.
'வியாழன் கிரகத்தில் வண்ணங்கள் நிறைந்த தடிமனான பட்டைகள் உள்ளன. இந்த வண்ணங்களில் சில அம்மோனியா மற்றும் பாஸ்பரஸின் புகைமூலங்களால் உருவாகலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.'
'தோலின்கள் எனப்படும் சில கரிம மூலக்கூறுகளும் உள்ளன, அவை பெட்ரோலுடன் தொடர்புடைய சிக்கலான கரிம மூலக்கூறுகள். எனவே, வியாழன் கிரகம் பூண்டுத் தன்மை மட்டுமல்லாது, பெட்ரோலிய 'எண்ணெய்' தன்மையையும் கொண்டிருக்கலாம்' என்று அவர் கூறுகிறார்.
பார்செனிலா ஒரு விண்வெளி விஞ்ஞானி, வாசனை திரவிய வடிவமைப்பாளர். அதனால் விண்வெளியில் வாசம் எப்படி இருக்கும் என ஆராயத் தொடங்கினார்.
பின்னர், தன்னுடைய ஆய்வகத்தில் அந்த மூலக்கூறு இருக்கிறது என்பதையும் உண்மையில் தன்னால் அதை உருவாக்க முடியும் என்பதையும் அவர் உணர்ந்தார்.
எனவே, செவ்வாய் கிரகத்தில் உயிரின் அறிகுறிகளைத் தேடும் தனது கல்விப் பணிகளுடன், லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு சிறப்பு கண்காட்சிக்காக விண்வெளியின் வாசனையை ஒத்திருக்கும் விஷயங்களை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
அழுகிய முட்டைகளின் துர்நாற்றம் முதல் பாதாம் பருப்பின் இனிய மணம் வரை, விண்வெளி என்பது வியக்கத்தக்க வகையில் மணம் வீசும் ஒரு இடம் என்று அவர் கூறுகிறார்.
வால் நட்சத்திரங்கள், கோள்கள், நிலவுகள் மற்றும் வாயு மேகங்களை நாம் நம் மூக்கால் முகர்ந்து பார்க்க முடிந்தால், அவை ஒவ்வொன்றும் தனித்துவமான வாசனையைக் கொண்டிருக்கும்.
பிரபஞ்சத்தின் வாசனை
வாசனை உணர்வு என்பது நம்மைச் சுற்றியுள்ள ரசாயனங்களைக் கண்டறியும் திறனைக் கொண்டுள்ளது.
மனிதர்களைப் பொறுத்தவரை, வாசனை உணவுகளை அடையாளம் காணவோ அல்லது சுற்றுச்சூழல் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கவோ உதவுவது மட்டுமல்லாமல், பழைய நினைவுகளைத் தூண்டுகிறது மற்றும் சமூக தொடர்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மில்லியன் கணக்கான ஆண்டுகள் பரிணாம வளர்ச்சிக்குப் பிறகு, வாசனை உணரும் திறன் என்பது நமது உளவியல் நலத்தோடு உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் நீண்டகாலம் தனிமையில் இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு, தங்களது வீட்டை நினைவுப்படுத்தும் ஒரு முக்கிய இணைப்பாகவும் இது இருக்கலாம்.
ஆனால் வாசனைகள் அல்லது நாற்றங்களைப் பொறுத்தவரை விண்வெளி நிலையம் என்பது விசித்திரமான ஒரு இடம் என்கிறார்.
விண்வெளி நிலையத்தில் ஒரு தனித்துவமான வாசனை இருந்தது என்று பல வீரர்கள் விண்வெளி நடைப்பயணத்திற்குப் பிறகு தெரிவித்தனர்.
'சிறுவயதில் நான் முகர்ந்த வாசனை அது. கார்கள் பழுதுபார்க்கும் இடத்தை கடந்து சென்றதைப் போன்ற மணம் வந்தது. வெல்டிங் வேலைகள் நடந்தால் வரும் வாசனை. அந்த உலோக வாசனை' என்கிறார் ஷார்மன்.
மற்ற விண்வெளி வீரர்கள் கருகிய இறைச்சி, வெடி மருந்து அல்லது எரிந்துபோன மின் வயரிங் போன்ற வாசனையை விவரித்துள்ளனர்.
ஆனால் இந்த வாசனைக்கு என்ன காரணம் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
'விண்வெளி நிலையத்தைச் சுற்றியுள்ள வளிமண்டலம், சூழல், கிட்டத்தட்ட ஒரு வெற்றிடமாக இருக்கிறது.
ஆனால் அந்த உயரத்தில் அது முழுமையான வெற்றிடமாகவும் இல்லை. வளிமண்டலத்தில் எஞ்சியிருப்பது அணு ஆக்ஸிஜன் ஆகும்.' என்று அவர் கூறுகிறார்.
பூமியில் உள்ள மனிதர்களான நாமும் ஓசோனின் வாசத்தை நுகர முடியும். இடியுடன் கூடிய மழைக்குப் பிறகு நிலையான மின்சாரத்தின் உலோக வாசனையை உணர்ந்திருந்தால் அது தான் ஓசோன் என்கிறார்
மற்றொரு சாத்தியக்கூறு என்னவென்றால்இ ஷார்மன் அப்போது ஒரு இறக்கும் நட்சத்திரத்தின் அணுக்களை சுவாசித்துக் கொண்டிருந்தார் எனக் கூறலாம். ஒரு நட்சத்திரம் இறக்கும் போது, அது ஒரு பெரிய அளவிலான ஆற்றலை வெளியிடுகிறது.
இந்த செயல்பாட்டின் போது நட்சத்திரம் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்களை (Pயுர்ள) உருவாக்குகிறது.
'கம்பி வடிவ மூலக்கூறுகள்' என்று ஷார்மன் கூறுகிறார். அவை பிரபஞ்சத்தைச் சுற்றி மிதந்து புதிய வால்மீன்கள், கோள்கள் மற்றும் நட்சத்திரங்களை உருவாக்க பங்களிக்கின்றன.
உணவு கருகினால், அப்போது இந்த மூலக்கூறு உருவாகும்.
நட்சத்திரங்கள் இறக்கும் போது, அவை எரிவது அதே வகையான மூலக்கூறுகளை உருவாக்குகிறது. பின்னர் அவை என்றென்றும் விண்வெளியில் மிதக்கின்றன' என்று பார்செனிலா கூறுகிறார்.