ஒரு முன்னால் மூத்த போராளியின் வேண்டுகோள்! தலைவரை மனதில் பதிய வைத்து சிந்தித்தால் எல்லாமே சரியாக நடக்கும்,
நடந்து முடிந்ததே வரலாறு - இதில் தணிக்கைக்கோ சமரசத்துக்கோ இடமில்லை.

2009இன் பின் தாயகத்திலும் உலகப் பரப்பிலும் உள்ள தமிழ் பேசும் மக்களின் மனதில் எழுந்து நின்ற வினா எமது தேசியத் தலைவரின் இருப்பு தொடர்பானது. இதற்கு 23 ஜூன் 2018 ஆம் நாளில் வெளிவந்த புதுவிதி இதழில் சத்திய சோதனை என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அவர் எமது மனங்களில் மட்டுமே வாழ்கின்றார் என்பதை வலியுறுத்தி இருந்தேன். பொதுவாக தாயகத்தில்இ குறிப்பாக முள்ளிவாய்க்கால் வரை பயணித்த மக்கள் களநிலைமைகளைச் சரியாகவே புரிந்து கொண்டவர்கள் என்ற வகையில் இனி எக்காலத்திலும் எங்கும் எம் கண்களில் அவர் தோன்றமாட்டார் என்ற கசப்பான உண்மையை புரிந்து கொண்டனர். கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட காணொளிகளை மட்டுமே பார்த்து இவ்வாறான உயரிய தலைவனின் காலத்தில் வாழ்ந்தோம்இ பங்களித்தோம் என்ற உணர்வினை பெற்றனர்.
தாயகத்தில் தலைவரின் புதல்வி துவாரகாவின் வித்துடலுக்கு மண் தூவி வீரவணக்கம் செய்தவர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கையில் துவாரகாவின் பேராலும் மோசடி செய்யும் ஈனப்பிறவிகள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எமது புனிதமான விடுதலை இயக்கத்தின் தலைவரை தமிழினம் இழந்துவிட்டது என்ற செய்தியை அனைத்து உலக பொறுப்பாளரென ஏற்கனவே தலைவர் உத்தியோகபூர்வமாக நியமித்த திரு. கே. பி மற்றும் அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ராம்இ பிராந்திய அரசியல் துறைப் பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோர் உலகுக்கு தெரியப்படுத்தியிருந்தனர். அந்த நாள் 17 மே 2009 என தெளிவாக குறிப்பிட்டிருந்தனர். இந்த உண்மையை எற்றுக்கொள்ளும் திராணி எப்போதும் போராட்டத்திற்கும் தேசிய தலைவருக்கும் விசுவாசமாக இருப்போம் என அடிக்கடி சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்ட அனைவருக்கும் இருக்க வேண்டும்.
உத்தியோகபூர்வமாக தலைவரால் நியமிக்கப்பட்ட இம் மூவரும் விடுத்த அறிவித்தலை இனி எவரும் உதாசீனம் செய்ய முனைய மாட்டார்கள் என நான் நம்புகின்றேன். ஏற்கனவே நடந்து முடிந்தது வரலாறு. இதில் தணிக்கைகோ சமரசத்துக்கோ இடமில்லை. பெரும்பான்மையினரின் முடிவு என்று தீர்மானிப்பதற்கு இது தேர்தல் அரசியல் அல்ல. நாம் எடுக்கும் முடிவுகள் இவ்வளவு காலமும் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தத்தை பிரதிபலிக்க வேண்டும். வேறு விதமாக வரலாற்றை மாற்றி அமைக்க முயலக்கூடாது என எமது மாவீரர் குடும்பங்களின் சார்பில் வேண்டிக் கொள்கின்றேன். தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் எனது காலடிகளும் நான் பயணித்த துவிச்சக்கர வண்டிகளின் தடங்களும் பதிந்துள்ளன என்ற உரிமையில் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன். தலைவரை மனதில் பதிய வைத்து சிந்தித்தால் எல்லாமே சரியாக நடக்கும் என நம்புகின்றேன்.
நன்றி
இவ்வண்ணம் உண்மையுள்ள
மு. மனோகர்(மு.அறிவன்) https://youtu.be/yu-0eBUxJho