கட்டார் நோக்கி பயணித்த சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் அபுதாபியில் தரையிறக்கப்பட்டுள்ளது !
மத்திய கிழக்கல் அமைதி திரும்ப இரு நாடுகளும் பூரண போர் நிறுத்தத்தை ஏற்றுகொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவிப்பு.

ஈரான் -இஸ்ரேல் சண்டையால் மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில் பிராந்தியத்தை அண்மித்து பயணிக்கும் அனைத்து இலங்கையர்கள் தொடர்பிலும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக, தேவைப்பட்டால் தூதரக அலுவலகங்கள் ஊடாக இணைந்து தலையீடு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கட்டாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் தாக்குதல்....! அல் உதெய்த் விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதுடன் வெற்றிகரமாக தாக்குதலை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டார் தலைநகர் டோஹாவின் தென்மேற்கே அமைந்துள்ள 24 ஹெக்டேர் (60 ஏக்கர்) இல் அல் உதெய்த் விமானத் தளமானது அமெரிக்க மத்திய கட்டளையின் முன்னோக்கிய தலைமையகமாகும். 1996 ஆம் ஆண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் நிறுவப்பட்ட இது, மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க தளமாகும்,
ஈரான், கட்டார் தலைநகர் டோஹாவில் உள்ள அமெரிக்காவின் அல்-உதெய் விமானத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியமைக்கு கத்தார் வெளியுறவு அமைச்சக ஊடகத் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, கண்டித்துள்ளதுடன் இது கட்டாரின் இறையாண்மை மற்றும் ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார். கட்டார் வான் பாதுகாப்பு மூலம் தாக்குதலை முறியடித்து ஈரானிய ஏவுகணைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டதாக அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் இங்கிலாந்தும் கட்டாரில் உள்ள தங்கள் குடிமக்களை மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது. கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.கட்டார் தாக்குதலை அடுத்து பஹ்ரைன் மற்றும் குவைத் நாட்டின் வான் பரப்புக்களும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கட்டார் நோக்கி பயணித்த சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் அபுதாபியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு. இதேவளை அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்த திட்டத்தை ஈரான் ஏற்றுக்கொண்டதாக ஈரானிய மூத்த அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள், மத்திய கிழக்கல் அமைதி திரும்ப இரு நாடுகளும் பூரண போர் நிறுத்தத்தை ஏற்றுகொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவிப்பு.
இதில் உண்மை இல்லை என ஈரான் தெரிவிப்பு.