பலதும் பத்தும். 18,06,20250 -ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டம்!
கடந்த வருடமும் யாழ் அணியே சாம்பியன்

கெஹெலிய ரம்புக்வெல்ல
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரை நிதிமோசடி குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்
வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற முடியும்.
ஈரானிய அரசாங்கம் தரைவழியதாக எல்லை கடக்கும் அனைத்து வழிகளையும் திறக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஈரானில் வசிக்கும் வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற முடியும்.
ஈரானின் அனைத்து எல்லைகளும் பயணிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக திறந்திருக்கும்,என்பதோடு மேலும் விமான சேவைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானியர்கள், சீனர்கள் மற்றும் தென் கொரியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் ஏற்கனவே தரை வழிகளைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சீனா தனது குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்றத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறது.
அதன்படி, சீன நாட்டினரின் முதல் குழு நேற்று (17) தெஹ்ரானில் இருந்து தரைவழியாக துர்க்மெனிஸ்தானுக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பூசா சிறை!
பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் கடுமையான சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டம் நடத்தினர்.
இன்று (18) காலை முதல் இந்த கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக என்று கூறப்படுகிறது.
கரப்பந்தாட்ட தொடரில் யாழ் அணி சம்பியனாக தெரிவானது.
கடந்த சனிக்கிழமை ஓமந்தை உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 2025 ம் ஆண்டுக்கான மாகாண மட்ட கரப்பந்தாட்ட தொடரில் யாழ் அணி சம்பியனாக தெரிவானது.
இறுதிப்போட்டியில் கிளி நொச்சி அணியினை 3:1 என்ற செற் கணக்கில் வென்று வடக்கின் சாம்பியன் அணியாக முடிசூடிக்கொண்டது யாழ் அணி.
யாழ் தெரிவு அணியானது யாழ்பாணத்தின் பிரபல கரப்பந்தாட்ட கழகங்களான ஆவரங்கால் இந்து இளைஞர் ,ஆவரங்கால் மத்தி ,புத்தூர் வளர்மதி ,புத்தூர் கலைமதி ,கெருடாவில் அண்ணா ,மற்றும் மட்டுவில் மோகனதாஸ் அணிகளை சேர்ந்த பிரபல வீரர்களை உள்ளடக்கிய பலம் மிக்க அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடமும் யாழ் அணியே சாம்பியன் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.