Breaking News
'நீதிக்கான நீண்ட காத்திருப்பு' ஆவணப்படத் திரையிடலும் கருத்துப் பகிர்வும்!
.

'நீதிக்கான நீண்ட காத்திருப்பு' ஆவணப்படத் திரையிடலும் கருத்துப் பகிர்வும்
எழுநாவின் தயாரிப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் 'நீதிக்கான நீண்ட காத்திருப்பு' எனும் ஆவணப்படத் திரையிடலும் கருத்துப் பகிர்வும் ,முல்லைத்தீவிலுள்ள இலங்கை செஞ்சிலுவை சங்க மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (20.06.2025) காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த ஆவணப்படம் இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின் போதும், அதன் பின்னும் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கதைகளை ஆராய்வதோடு, அவர்களது உறவுகளது வலிமிகுந்த போராட்டங்களும் கண்ணீரும் கோபமும் ஏக்கமும் இதன் மூலம் உலகிற்கு எடுத்துரைக்கப்படுகின்றன. மேலும், நடந்த அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை இந்த ஆவணப்படம் வலியுறுத்துவதோடு, பொறுப்புக்கூற மறுக்கும் அதிகாரசக்திகளின் இயல்பாகிவிட்ட அலட்சியத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றது.
ஆர்வலர்கள் அனைவரையும் அழைக்கின்றனர்.