மாறன்களின் தந்திரம்இ சூழ்ச்சியால் சுடுகாட்டின் மீது கட்டிய மாளிகை!
முற்பகல் செய்யின் அப்பகலே விளையும் !தமிழ்நாடு தொலைக் காட்சி ஊடகங்களை கொன்றழித்த மாறன் சகோதரர்கள் !

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்...அதாவது முன் பிறவியில் செய்த பாவச் செயல்களும், வினைகளும் அடுத்த பிறவியில் வந்து பழிவாங்கும் என்பது சிலப்பதிகாரம் உணர்த்தும் ஒரு உண்மை. ஆனால், இப்போதெல்லாம் அந்தப் பிறவியிலேயே ஊழ் வந்து உருத்தி விடுகிறது.
முற்பகல் செய்யின் அப்பகலே விளையும் !தமிழ்நாடு தொலைக் காட்சி ஊடகங்களை கொன்றழித்த மாறன் சகோதரர்கள் !
சன் டிவி நெட்ஒர்க்-ன் உரிமையாளர்கள் ஒன்றும் திறமையால், படைப்பு அறிவால் வளர்ந்தவர்கள் அல்ல, தந்திரம், சூழ்ச்சி தொலைக்காட்சி உலகில் பிற அனைவரையும் அடித்து, மிரட்டி, அழித்து அந்த சுடுகாட்டின் மீது மாளிகை கட்டி அமர்ந்து கொண்டவர்கள்.
அரைக்கால் டவுசர் அணிந்து எளியவர்களாக சென்னை தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தவர்கள்தான் கலாநிதி மாறன், தயாநிதி மாறன்கள். இவர்களின் ஒரே தகுதி கருணாநிதியின் மனசாட்சியாக இருந்த முரசொலி மாறனின் மகன்கள் என்பதும், தாத்தா கருணாநிதி என்பதுமே.
வேறு எந்தத் தொழிலும் சரிவர அமையாத நிலையில், பூமாலை எனும் பெயரில் வீடியோ இதழ் ஒன்றைத் தொடங்கினார்கள் சகோதரர்கள்.
இதன்படி, நேர்காணல், துணுக்குகள், உள்ளூர் முதல் உலகச் செய்திகள் வரை ஒரு அரைமணி நேரத்திற்கு ஒரு வீடியோ கேசட்டில் பதிவு செய்து அதை வாடகைக்கு விடும் பணிதான் இவர்களின் முதல் பணி.
அதாவது, அந்தக் கால கட்டங்களில் திரையரங்கம் தவிர வீட்டில் திரைப்படம் பார்க்கவேண்டும் என்றால் வீடியோ கேசட் பிளேயர் வாங்க அல்லது வாடகைக்கு எடுக்கலாம்...அதைத் தொலைக்காட்சி பெட்டியுடன் இணைத்து வீடியோ கேசட்டை அதில் இயக்கிப் படம் பார்க்கலாம்.
இப்படிப்பட்ட வீடியோ கேசட்டில் அனந்த விகடன் உள்ளிட்ட வார இதழ் போல, "தொலைக்காட்சி இதழ்" எனும் அரை மணி நேர நிகழ்ச்சியை வழங்கும் முயற்சிதான் மாறன் சகோதரர்களின் பூமாலை வீடியோ கேசட் திட்டம்.
ஆக, வீடியோ பிளேயர் வைத்து இருப்பவர்கள் மட்டுமே இந்த கேசட்டுகளை வாடகைக்கு வாங்கிப் பார்க்க முடியும். அன்று சிடி, டிவிடி, பென் ட்ரைவ் போன்றவை இல்லை.
இப்படி இவர்கள் தொடங்கும்போது அன்று நம்பர் 1 நிலையில் இருந்தது தூர்தர்ஷன் அரசு தொலைக்காட்சி மட்டுமே.
வாரம் ஒருநாள் இரவு ஒருமணி நேரம் தமிழ்ப் பாடல்கள் ஒளிபரப்பாகும், அன்றாடம் இனிமையான பிற மொழிப் பாடல்கள், தமிழ் நாடகங்கள் ஒளிபரப்பாகும். மாலையில் வயலும் வாழ்வும் எனும் வேளாண் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
அப்போது, தனியார் தொலைக்காட்சிகள் இல்லை.
1993 ம் ஆண்டில் தனியார் தொலைக்காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.1993 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி சன் நெட்ஒர்க்கின் முதல் தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது.
ஆனால், அதேவேளை அதை ஒளிபரப்ப இந்தியாவில் வசதி இல்லை. பூமாலை கேசட் வீடியோ இதழ் ஐட்டத்தை அப்படியே கேசட்டில் பதிவு செய்து கொண்டு அந்த கேசட் சென்னையில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகருக்கு வானூர்தி மூலம் அனுப்பப்படும். அங்கிருந்துதான் ஒளிபரப்ப இயலும்.
எனவே ஒரு நாளைக்கு அரைமணி நேரம் மட்டுமே ஓளிபரப்பு இருக்கும். அதன்பிறகு 1995 ம் ஆண்டுதான் நிகழ்ச்சிகள் அதிகரிக்கப்பட்டடன.
அந்தக் காலகட்டங்களில் 5000, 10,000 ரூபாய்க்கு எல்லாம் அல்லாடியவர்கள்தான் மாறன் சகோதரர்கள். தொலைகாட்சி தொடங்கிய இரண்டாம் ஆண்டு ஊதியம் கொடுக்க இயலாத நிலைதான் சன் டிவிக்கு. திமுக கட்சி சொத்து, திமுகவின் பணத்தைக் கொண்டு மாறன் பிரதர்ஸ் தப்பித்தனர்.
ஆனால் அதன்பிறகு அவர்களின் ஆட்டம் பேயாட்டமானது. திமுக கட்சியின் சொத்துகள், தமிழ்நாடு அரசாட்சி, இந்திய அரசில் பங்கு, திமுக தொண்டர்கள் ஆகியவற்றை வைத்து தமக்கான ஒரு தனி உலகத்தை உருவாக்கி பிற தொலைக்காட்சிகளை அழித்தொழித்து பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆனவர்கள் கலாநிதி, தயாநிதி மாறன்கள்.
திமுக ஆதரவு செய்திகள் அதேவேளை எதிர்கட்சிகளை ஒழிக்கும் செய்திகள் என சன் முன்வைத்ததால் கட்சி சொத்தை வைத்தே கருணாநிதி குடும்பம் குறிப்பாக கலாநிதி வளர்வதைக் கண்டு கொள்ளாமல் விட்டனர் திமுகவினர்.
அதற்கு ஏற்ப இந்திய அரசில் பேரன் தயாநிதியைத் தொலைத் தொடர்பு அமைச்சராக்கி அழகு பார்த்தார் கருணாநிதி.
Conflict of Interest என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதாவது, "தாம் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும்போது அது தொடர்பான ஒரு துறைக்கு அமைச்சர் ஆக ஆக்குவது ஒருவகையில் குற்றம்" என்பது. எடுத்துக்காட்டாக, ஒரு நீதிபதி தமது குடும்பம் தொடர்பான ஒரு வழக்கில் தாம் நீதிபதியாக அமர்ந்து விசாரித்தால் கூடாது என்பது போல.
ஆனால், திமுகவின் குறிப்பாக கருணாதியின் அகராதியில் "அரசியல், கட்சி, ஆட்சி அதிகாரத்தைத் தமது குடும்ப நலனுக்காகவே மட்டுமே பயன்படுத்திக்கொள்ளுதல்" என்பது மட்டுமே சனநாயகம், மக்கள் நலன் மற்றும் சமூக நீதி.
ஓசி அறிவாலய கட்டடம், ஓசி தொலைபேசி இணைப்புகள், ஓசி திமுக உடன்பிறப்பு பார்வையாளர்கள், ஓசி ஆட்சி அதிகாரம் என ஆடக்கூடாத ஆட்டமெல்லாம் ஆடி சன் நெட்ஒர்க் நிறுவனத்தை ஆசியாவின் பெரும் நிறுவனமாக "வளர்த்தினார்கள்" மாறன் பிரதர்ஸ்.
மாநில ஆட்சியோ மத்திய ஆட்சியோ அது தங்களின் இருவருக்கான வணிகத்திற்காக மட்டுமே என்பதே அவர்களின் தாரக மந்திரம்.
இதெல்லாம் கட்சி, ஆட்சி, அதிகாரத்தை வைத்து சாதித்து விடலாம்...ஆனால் போட்டியாளர்களை எப்படி முறியடிப்பது. அதற்கு படைப்பாற்றல் எனும் அறிவு வேண்டுமே. மேலும், அது ரொம்ப சோம்பேறித்தனமானது ஆயிற்றே...அதற்குப் பதிலாக அடுத்தவரை அழித்துப் பிழைப்பதுதானே எளிது, நமக்குத் தெரிந்த ஒன்று.....
இதுதான் மாறன் சகோதரர்களின் மகத்தான "கொள்கை" !
1993 களில் ஒரு அரை மணி நேரப் பூமாலை கேசட்டைத் தயாரித்து அதை மணிலாவுக்கு அனுப்பி அங்கிருந்து ஒளிபரப்பிய நிலையில்....அந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் பாடல்கள் உள்ளிட்ட அரசு தொலைக்காட்சி தூர்தர்ஷனின் மாலை நேர நிகழ்ச்சியை மட்டுமே மக்கள் அதிக அளவில் பார்த்து வந்தனர்.
சன் டிவியின் பூமாலை எடுபடவில்லை. திடீர்னு ஒரு நாள் தூர்தர்ஷன் மாலை நேர நல்ல நிகழ்ச்சிகள் நேரம் மாற்றப்பட்டு சன் டிவி பூமாலை ஒளிபரப்பாகும் அந்த அரை மணி நேரத்திற்கு தூர்தர்ஷனில் வயலும் வாழ்வும் எனும் வேளாண் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இதையடுத்து அந்த நேரத்தில் பூமாலையை நோக்கி மக்கள் திரும்பினர்.
இப்படி, தூர்தர்ஷனில், சன் டிவி ஒளிபரப்புக்கு சாதகமாக நிகழ்ச்சி நேரத்தை மாற்ற அன்றே மூன்று லட்சம் ரூபாய் கைமாறியதாக ஒரு பேச்சு அன்று வலம் வந்தது.
அடுத்ததாக யார்...?! வேறு யார் ராஜ் டிவி நிறுவனத்தர்தான். அவர்கள் வீடியோ கேசட் வாடகை மற்றும் விற்பனை கடை நடத்தி வருகின்றனர். அந்த அனுபவத்தில் தொலைக்காட்சி தொடங்கினர்.
சன் டிவி, திமுக கட்சி ஆதரவுச் சேனல் என்பதால் இயல்பாகவே மக்கள் கட்சி சார்பற்ற ராஜ் டிவியைக் காணக் குவிந்தனர்.
தூர்தர்ஷனை சரிக்கட்டியதுபோல ராஜ் டிவியை ஒன்றும் செய்ய இயலவில்லை. மக்கள் வரவேற்பு பெற்ற ஊடகமாக அது இருந்தது.
மாறன் பிரதர்ஸ் எடுத்த அத்திரம், ராஜ் டிவி வீடியோ கடையில் அடிக்கடி வீடியோ பைரஸிப் பிரிவுக் காவல் துறையினரை வைத்து ரெய்டு விடுவது. கலாநிதியின் நண்பரும் அடாவடி ஆளுமாக இருந்த சாக்ஸ் எனும் சக்சேனா, வார இறுதியில் ராஜ் டிவி உரிமையாளரை தமது வாகனத்தில் ஏற்றி சென்னை மாநகரம் முழுதும் சுற்றி சுற்றி வந்து மிரட்டுவது அடிப்பது என்று ரவுடித்தனத்தின் உச்சத்தைத் தொட்டது மாறன் பிரதர்ஸ் குழுமத்தின் "வியாபரா உத்தி" !
அதேபோல ஜீ நெட்ஒர்க்.
ஜீ தொலைக்காட்சி நெட்ஒர்க் வட இந்தியாவின் நம்பர் 1 பெரிய நெட்ஒர்க்.
பூமாலை வீடியோ கேசட் வாடகைக்கு விட்டிக்கொண்டிருந்த நிலையில் ஜீ நெட்ஒர்க்கின் உரிமையாளர் சுபாஷ் சந்திராவை சந்தித்து அவர்கள் நெட்ஒர்க்கில் தொலைக்காட்சி தொடங்க வாய்ப்பு கேட்கப் போனார்கள். அப்போது சுபாஷ் சந்திரா ஒரு மணி நேரம் இவர்களை சந்திக்காமல் காத்திருக்க வைத்து விட்டார் என்பதை மனதில் வைத்து, ஜீ நெட்வொர்க் தமிழில் செய்தி ஒளிபரப்ப இயலாதவாறு செய்தனர். அவர்களுக்கு கேபிள் இணைப்புத் தராமல் செய்தனர் மாறன் பிரதர்ஸ். இன்று வரை பொழுது போக்கு மட்டுமே ஜீ நெட்ஒர்க்கில் ஒளிபரப்பரப்பாவதைக் காணலாம்.
அதேபோல, NDTV விஜய் செய்திகள் 2000 ஆண்டு முதல் 2004 ம் ஆண்டுவரை விஜய் செய்திகளில் தரமான செய்தித் தொகுப்புகள் வெளியாகின.
BBC ஊடக ரேஞ்சுக்கு தரமான செய்திகளை இது வழங்கியது. மேலும், உண்மைச் செய்திகளை வெளியிட்டனர்.
அது எப்படி கருணாநிதி குடும்பத்திற்கு ஆகும்....உண்மையை சொன்னா தமது குடும்பத்தைக் கட்சிக்காரன் கூட மதிக்கமாட்டானே !
விஜய் டிவிக்குக் கொடுத்த தொல்லையில் அது செய்தி வெளியிடுவதையே 2004 ம் ஆண்டு நிறுத்திக்கொண்டது. அப்போது அதில் பணிபுரிந்தவர்களில் நீயா நானா கோபி, ரெட்பிக்ஸ் ஜெரால்டு உள்ளிட்டவர்கள் சிலர். சுமார் 100 பேர் வேலை இழந்தார்கள்.
ராஜ்டிவியின் தொலைக்காட்சி உரிமைத்தைப் பறித்தது, அவர்களின் ஒளிபரப்பு வாகனத்தைப் பறித்தது என்று தயாநிதி மாறன் பேயாட்டம் ஆடினார் தமது சகோதரர் கலாநிதி மாறன் சன் நெட்ஒர்க் வளர !
சன் நியூஸ் தவிர வேறு யாரும் செய்தி வெளியிடக்கூடாது, அப்படி வெளியிட்டாலும் அது முதன்மை நேரமாக இருக்கக்கூடாது என்று ஒட்டுமொத்த தொலைக்காட்சி உலகம் தங்கள் வசம் மட்டுமே இருக்க வேண்டும் என்று கால்கள், கைகளில் சலங்கை காட்டி பேயாட்டம் அடியவர்கள்தான் மாறன் பிரதர்ஸ்.
கேபிள் தொழிலில், பாலிமர் டிவி கல்யாண சுந்தரம் அவர்கள் அருமையான வளர்ச்சி பெற்றார்.
பாலிமர் கேபிள் இணைப்பு நீலகிரி தொடங்கி கிட்டத்தட்ட வண்டலூர் வரை சென்றது.
விடுவார்களா மாறன் பிரதர்ஸ்...கேபிள் தொழிலின் தாதா ரவுடிகள் நாங்களாக்கும் என்று பாலிமர் கேபிளை அழித்து ஒழித்து சுருக்கினார்கள்.
பிற கேபிள் நிறுவனத்தாரின் கேபிள்களை தயாநிதி மாறனே ஆட்களை விட்டும், தாமே நேரில் சென்றும் அறுத்து எரிந்த நிகழ்வுகள் உண்டு.
கட்சி, ஆட்சி, அதிகாரம், காவல்துறை, ரவுடியிசம் என அனைத்தையும் பயன்படுத்தி "வளர்ந்த" நிறுவனம்தான் மாறன் பிரதர்ஸின் சன் நெட்ஒர்க் சாம்ராஜ்யம் !
இன்று....தயாநிதி மாறன் கலாநிதி மாறன் இடையே இன்று ஏற்பட்டுள்ளது...இதோ இந்தப்பாவச் செயல்களின் "பங்குச்" சண்டைதான் !
பாவத்தில் "பங்கு" போட்டுக்கொள்ள அடித்துக்கொள்ளப் போகிறார்கள் !
திரைமறைவில் அடுத்தவர்களை அழித்து மேலே வந்தவர்கள் பொதுவெளியில் அம்பலப்படுகிறார்கள் !
திரைப்படத் துறையில் இவர்களின் ஆட்டம் வேறு ரகம். அதை இன்னொரு நாள் பார்ப்போம்.
இவர்களால் வீழ்த்தப்பட முடியாத ஒரே தொலைக்காட்சி ஜெயா தொலக்காட்சிதான்.
ஆனால் , அதற்கு முன்னர் ஜெ ஜெ தொலைக்காட்சியை மாறன் பிரதர்ஸ் வீழ்த்தினார்கள். அதில் கற்றுக்கொண்ட பாடத்தில் செல்வி. ஜெயலலிதா ஜெயா தொலைகாட்சியை நெருங்க விடாதவாறு செய்திருந்தார்.
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்,