தமிழர் தெருவிழா G7 மற்றும் ஐ.நா. போன்ற அடிப்படையில், சுழற்சி முறையில் சமூக அடிப்படையிலான தலைமையை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தெருவிழா மூலம் பெறப்படும் வருமானம் 'தமிழ்ச் சமுக மையம்' போன்ற அர்த்தமுள்ள சமூக முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்.

தமிழர் தெருவிழா மக்களால் நிர்மாணிக்கப்பட்டது. அதன் எதிர்காலம் மக்களின் தொடர்ச்சியான ஆதரவிலேயே தங்கியுள்ளது. அந்த ஆதரவு இயல்பாகவே கிடைக்கும் ஒன்றல்ல - அது நிபந்தனைக்குட்பட்டது. அது மாற்றத்தைப் பொறுத்து அமைகிறது.
கனேடியத் தமிழர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளைத் தெளிவுபடுத்தியுள்ளனர். தமிழர் தெருவிழாவின் எதிர்காலம் ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலில் வேரூன்றி இருக்க வேண்டும். ஒரு சமூகத்தின் கொண்டாட்டம் என்பது நியாயம், உள்ளடக்கம் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட பொறுப்புகள் ஆகியவற்றை பிரதிபலிக்க வேண்டும்.
நமது சமூகம் நீண்ட காலமாகக் கோரி வந்த மாற்றங்களைக் கனடியத் தமிழர் பேரவை (CTC) ஏற்படுத்தவில்லை. தலைமையில் மாற்றம் ஏற்படவில்லை. கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் ஏற்படவில்லை. அதே நபர்கள் பதவிகளில் உள்ளனர். வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகமான நிர்வாக கட்டமைப்பு குறித்த நீண்டகால கரிசனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
இந்த நிலையை மாற்ற இன்னும் காலம் தாமதமாகவில்லை. ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு துணிவு, பணிவு மற்றும் சீர்திருத்தத்திற்கான உண்மையான அர்ப்பணிப்பு ஆகியன அவசியமாகும்.
தமிழர் தெருவிழா தற்போதைய நிலையைப் பாதுகாத்துக்கொள்ள உதவக்கூடாது. அது மாற்றத்தை உருவாக்க வேண்டும். அந்த மாற்றத்திற்கான பரிணாமம் அது எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. மேலும், அது பொறுப்புக்கூறலுடன் ஆரம்பிக்க வேண்டும். அர்த்தமுள்ள சீர்திருத்தத்தையும், புதுப்பிக்கப்பட்ட சமூக நம்பிக்கையையும் அனுமதிக்கும் வகையில் CTC யின் தலைமையில் இருப்பவர்கள் ஒதுங்கி வழிவிடவேண்டும்.
இனிவரும் காலங்களில், தமிழர் தெருவிழாவை எந்தவொரு தனிக் குழுவும் அல்லாமல், தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு வழிநடத்த வேண்டும். எதிர்கால கட்டமைப்பு பரந்த சமூக ஆலோசனை மூலம் உருவாக்கப்பட வேண்டும். இதில் இணைந்து கொள்ள ஆர்வம்கொண்டுள்ள குழுக்கள் உள்ளடக்கப்பட வேண்டும். G7 மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை போல, இதன் தலைமை சுழச்சி முறையில் அமைய வேண்டும். இதில் எந்த ஒரு தனி அமைப்பும் நிரந்தரக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கக்கூடாது.
தெருவிழா மூலம் பெறப்படும் வருமானம் 'தமிழ்ச் சமுக மையம்' போன்ற அர்த்தமுள்ள சமூக முயற்சிகளை ஆதரிக்க வேண்டும். அது தெருவிழாவை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் மேற்பார்வையின் கீழ், முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் நிர்வகிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நம்பிக்கையை மீண்டும் உருவாக்க முடியும். அப்போதுதான் தமிழர் தெருவிழா உண்மையில் மக்களுக்கு உரித்துடையதாக மாறும்.
முன்னோக்கி செல்லும் பாதைக்கு தகுந்த நடவடிக்கை தேவை. தலைவர்கள் பொறுப்புகுரியவர்களாக இருக்கவேண்டும். அதிகாரம் பகிரப்பட வேண்டும். பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
இந்த மாற்றங்கள் இல்லாமல், எதிர்காலத்தில் தமிழர் தெருவிழாவுக்கான ஆதரவு நிச்சயமற்றதாகவே இருக்கும். எனவே, விற்பனையாளர்கள், கலைஞர்கள், பங்காளிகள், அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் அவதானிகளாக மட்டும் இல்லாமல், தாம் சார்ந்த சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் பங்காளர்களாக உருவெடுக்கவேண்டும். ஆகவே, உண்மையானதும் திடமானதுமான மாற்றம் உறுதிசெய்யப்படும்வரை, தெருவிழா பங்களிப்பு முடிவுகளைப் பரிசீலனைக்குட்படுத்தவும்.
இது பிரிவினைக்கான அழைப்பு அல்ல; இது புதுப்பித்தலுக்கான அழைப்பு - தமிழ் மக்களின் வலிமை, கண்ணியம் மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு தமிழர் தெருவிழாவை வடிவமைக்க இது ஒரு வாய்ப்பாகும்.
-கனேடியத் தமிழர் கூட்டு